Advertisement
Uncategorized

காலை உணவுக்கு ருசியான மரவள்ளி அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Advertisement

எப்பொழுதும் காலையிலும், இரவிலும் உணவிற்கு இட்லி, தோசை போன்றே செய்து சாப்பிடாமல் இது போன்று மரவள்ளி கிழங்கு அடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த அடை தோசை செய்து அத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும்.

இந்த மரவள்ளி அடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

Advertisement

மரவள்ளி அடை | Tapioca Adai Recipe In Tamil

Print Recipe
எப்பொழுதும் காலையிலும், இரவிலும் உணவிற்கு இட்லி, தோசை போன்றே செய்து சாப்பிடாமல் இது போன்று மரவள்ளி கிழங்கு அடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த அடை தோசை செய்து அத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும்.
இந்த மரவள்ளி அடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword maravalli adai, மரவள்ளி அடை
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
2 hours
Total Time 2 hours 15 minutes
Servings 4 people

Equipment

  • தோசை கல்

Ingredients

  • 1 மரவள்ளி கிழங்கு
  • 2 கப் இட்லி அரிசி
  • ½ கப் கடலை பருப்பு
  • ½ கப் துவரம் பருப்பு
  • ½ கப் உளுந்து
  • 5 வர மிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 கேரட் துருவியது
  • கொத்தமல்லி தலை நறுக்கியது கொஞ்சம்

Instructions

  • முதலில் மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பௌலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, வர மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் அதனை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் துருவிய மரவள்ளி கிழங்கை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடை மாவு பதத்தில் இருக்கவேண்டும். புளிக்க வைக்க அவசியம் இல்லை.
  • அடுத்து அந்த மாவில் தேவையான அளவு உப்பு, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் அதனை மாவில் சேர்த்து அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  • பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை அடை போல் ஊற்றி இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

3 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

10 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

21 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

23 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago