நமது பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு என்னவென்றால் அது கேப்பகளி. தினமும் காலையில் நமது முன்னோர்கள் இந்த உணவை காலை உணவாக உண்டு வந்தனர். எனவேதான் அவர்கள் அதிக வயதுடன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் 50 வயதில் செய்த வேலையை கூட இப்போதுள்ள தலைமுறையினரால் 20 வயதில் கூட செய்ய முடிவதில்லை. அந்த அளவிற்கு இது போன்ற உணவுகள் அவர்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருந்தது.
இன்றைய தலைமுறையினரரோ உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் பல உணவை உண்கின்றனர் . எனவே இவற்றைத் தவிர்த்து விட்டு குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள். இப்பொழுது இருப்பவர்கள் மிகவும் சுலபமாக செய்யும் வகையில் இந்த கேழ்வரகு களியை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது கேழ்வரகு சேர்த்த உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். . இதை கேழ்வரகு களி, கேப்பைக்களி எந்த பெயரில் வேண்டும் என்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சைவ கிரேவி அசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். அருமையான கேழ்வரகு களி செய்முறை இதோ.
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…