பொதுவாக சிலர் வீட்டில் அதிகம் கஷ்டத்தை மட்டும் அளிக்கிறார் கடவுள் என்று அவரை திட்டுவது உண்டு. ஆனால் அவரவர் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அது தான் நடக்கும். சிலர் வீட்டில் நன்றாக சம்பாதிக்கிறோம் ஆனால் எங்கள் வீட்டில் பணமும் சேருவதில்லை நகைகளும் சேருவதில்லை என்று புலம்புவது உண்டு. தங்கம் வாங்கவே முடியாத சூழல் இருப்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
தங்கம் வாங்க வேண்டும் அதை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் யாரும் இல்லை. நம் கையில் தங்கம் இருக்கும் பட்சத்தில் அது ஒரு முதலீடாக இருக்கும். அதை நாம் எப்போதும் வேண்டுமானாலூம் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இந்த தங்கம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிலருக்கு என்ன தான் போராடினாலும் தங்கம் வாங்கும் யோகமே இருக்காது. அதே நேரத்தில் வாங்கிய நகையை அணியும் யோகமும் இருக்காது. தங்கம் வாங்கவும், வாங்கிய நகை அடமானம் செல்லாமல் இருப்பதற்கும் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோராலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியாது. ஏதாவது ஒரு விதத்தில் பிரச்னைகள் நம்மை வதைத்துக் கொண்டுதான் இருக்கும். இதற்கு கிரக நிலைகளும் காரணமாக இருக்கலாம். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க இந்த கடுக்காய் ஒன்று போதும். இந்த கடுக்காய் மருத்துவ வழியில் மட்டுமல்லாமல் ஆன்மிக வழியிலும் பல நன்மைகளை நமக்கு தருகிறது. அந்த வகையில் கடுக்காயை வைத்து செய்யக் கூடிய பரிகாரத்தை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
இந்த பரிகாரத்தை நாம் எந்த நாள் கிழமையிலும் செய்யலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு மூன்று ஜாதிக்காயை பன்னீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற
துணியை பன்னீரில் நனைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் ஜாதிக்காயை இந்த மஞ்சள் நிற துணியில் வைத்து அதனுடன், ஒரு தங்க பொருள் அதாவது மோதிரமோ அல்லது உங்களிடம் இருக்கும் ஏதாவது தங்கத்தையோ அதனுடன் வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.பின்னர் இதனை உங்கள் வீட்டு பூஜை
அறையில் வைத்து உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையோ அல்லது தங்க நகை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனையோ அனைத்தும் விலக வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு, விளக்கு ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு இதனை எடுத்து நீங்கள் பணம் புழங்கும் இடத்தில் வைத்து விடுங்கள். நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் இந்த மூட்டையை வைத்து விடுங்கள். தொழில் நன்றாக நடப்பதோடு மட்டுமின்றி பணவரவும் அதிகரிக்கும். இந்த ஜாதிக்காய் மூட்டையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றினாலே போதுமானது.இதனையும் படியுங்கள் : சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் மகாலட்சுமி மகிழ்ச்சி அடைந்து வீட்டில் பணம் சேருமாம்!
இந்த ஜாதிக்காய் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இதற்கு நேர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. அதே போல் இதற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. இப்படி இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வதால் வீட்டில் பணம் வந்து கொண்டே இருக்கும். நாம் செலவு செய்த பணம் கூட பல மடங்காக நம்மிடம் திரும்பி வந்து விடும். வீண் விரயங்கள் ஏற்பட்டு சேமிப்பு கரைவதும் இருக்காது.
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…