குழம்பு வகைகளை போன்றே சட்னி வகைகளும் இன்று அதிகமாகிவிட்டது. அதுவும் ஆரோக்கியமான காலை உணவை உறுதி செய்யும் வகையில் இந்த சட்னி வகைகளும் இருக்கின்றன. அந்த விதத்தில் இன்று துவரம் பருப்பை பயன்படுத்தி செய்யப்படும் இந்த சட்னி உங்கள் காலை உணவை ஸ்பெஷலாக்கும். வேலைக்கு செல்லும் அவசரத்திலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் சில நேரம் விழி பிதுங்கி விடும். இது போன்ற சமயங்களில் இந்த சட்னி உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனென்றால் இது அரைத்தால் மதியம் சாப்பாட்டிற்கும் வைத்துக் கொள்ளலாம். துவரம் பருப்பில் குழம்பு, துவையல் போன்றவற்றை அடிக்கடி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் துவரம்பருப்பு சட்னி செய்திருக்கீங்களா.? ஆம் துவரம் பருப்பை கொண்டு சட்னியும் செய்யலாம்.
இதை இட்லி, தோசை மட்டுமல்லாமல் தயிர் சாதம், தக்காளி சாதம் புளி சாதம் என அனைத்து வகையான கட்டு சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ்ஷாக இருக்கும். அதோடு இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இதன் சுவையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். துவரம் பருப்பில் பருப்பு குழம்பு வைத்தால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி சட்னி செய்து கொடுக்கலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த துவரம் பருப்பு கொண்டு செய்யப்படும் சுவைமிக்க சட்னியை எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…
ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…
அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…
நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…
மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…