Advertisement
காலை உணவு

ருசியான சைதாப்பேட்டை வடைகறி இப்படி வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள்! செய்வதற்கும் ஈஸி!

Advertisement

சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு,தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை  வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசி அனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என்றே பருப்பை ஊற வைத்து வடை செய்து இந்த வடகறி தயாரித்தனர். வடகறி உணவு என்பது தற்போது அனைத்து உணவகங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது வடகறி இருந்தால்.

வடகறி உருவான கதை: மாரிமுத்து தேவர், 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்து சிறிய டீக்கடை ஒன்றை தொடங்கினார். பருப்பு வடை, மெது வடை, போண்டா போன்றவற்றையும் சுட்டு விற்றார். மீதம் இருந்த பருப்பு வடையை வடை கறியாக மாற்றி வீட்டில் சாப்பிட்டுள்ளார். அதுவே  காலபோக்கில் பின்னாலில் அனைத்து ஹோட்டல்களிலும் பிரசித்தி பெற்றது. வாங்க இந்த அருமையான வடகறி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

வடைகறி | Vada curry Recipe In Tamil

Print Recipe
சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு, தற்போது தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரிபோன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை  வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசிஅனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என்றே பருப்பை ஊற வைத்து வடை செய்து இந்தவடகறி தயாரித்தனர்.
Advertisement
வடகறி உணவு என்பது தற்போது அனைத்து உணவகங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டதுவடகறி இருந்தால். வாங்க இந்தஅருமையான வடகறி எப்படி செய்வது என்று பார்ப்போம்
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword வடகறி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 190

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 250 கிராம் கடலை பருப்பு
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சைமிளகாய்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி பூண்டு இஞ்சி விழுது
  • பட்டை தேவையானஅளவு
  • கிராம்பு தேவையானஅளவு

Instructions

  • முதலில் கடலைபருப்பை 30 நிமிடம் ஊற வைத்து சோம்பு, ஒரு பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துஎடுத்து வைக்கவும். அரைத்து எடுத்த கலவையை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் நன்றாகவேக வைத்து எடுக்கவும்
  • வெந்ததும் எடுத்து அதனை படத்தில் உள்ளது போல் நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
  • அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு மற்றும் அனைத்து பொடிகளை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் கடலை பருப்பு கலவையும் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்த பின்பு சுண்டி வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.  பிறகுஅதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து சூடாக பரிமாறவும்.

Notes

பொதுவாக வடைகறி எண்ணெயில் பொரித்து தான் செய்வார்கள், இது குறைந்த எண்ணெயில் செய்தது யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி மற்றும் பூரிக்கு ஏற்ற ஒரு பொருத்தம்

Nutrition

Serving: 300g | Calories: 190kcal | Carbohydrates: 5.9g | Protein: 14.2g | Fat: 0.2g | Sodium: 4mg | Fiber: 15.4g | Sugar: 2g | Vitamin C: 13.5mg | Iron: 0.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 மணி நேரம் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

15 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

16 மணி நேரங்கள் ago