முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு புளியை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய்,மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம், மிளகு, வெந்தயம்,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின் பூண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது தேவைாயான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு ஒரளவு கெட்டியானவுடன் மீன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.பின்பு பரிமாறவும். சுவையான காரைக்குடி மீன் குழம்பு தயார்.