கோலி குண்டு அளவிலிருந்தாலும் மலையளவு சத்துக்களை கொண்ட காய் எதுவென கேட்டால் நெல்லிக்காய் என சட்டென சொல்லிவிடலாம். நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சற்று கசப்பு நிறைந்த ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக வல்லமையான ஒன்று. நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் என அதன் சத்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நெல்லிக்காயில் ஜூஸ், ஊறுகாய் போன்றவற்றை அடிக்கடி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் நெல்லிக்காய் சட்னி செய்திருக்கீங்களா.? ஆம் நெல்லிக்காயை கொண்டு சட்னியும் செய்யலாம். இதை இட்லி, தோசை மட்டுமல்லாமல் தயிர் சாதம், தக்காளி சாதம் புளி சாதம் என அனைத்து வகையான கட்டு சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ்ஷாக இருக்கும். அதோடு இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில் சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.
இதன் சுவையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். அதன் துவர்ப்பு சுவை சிலருக்கு பிடிக்காது. ஆனால் நெல்லிக்காயை சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்தால் நா இனிக்கும். எனவே ஒரு சில குழந்தைகள் அதை விரும்புவார்கள். நெல்லிக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி சட்னி செய்து கொடுக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்றவுடன் சொல்லும் பொருள்களில் நெல்லிக்காயும் ஒன்று. இந்த நெல்லிக்காய் கொண்டு செய்யப்படும் சுவைமிக்க சட்னியை எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் நெல்லிக்காய் ஊறுகாய் இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்கள்!
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…