இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்பது நம் முன்னோர் எழுதிய பழமொழி. அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய பொருட்களில் கொள்ளு முதன்மையானதாக ‘கொள்ளு’ உள்ளது. அதோடு இவை ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரோக்கியமான உணவை ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். மேலும் ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் தொடர்பான பாதிப்புகள் ஆகியவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும். பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.
பசியை தூண்டுவதிலும், உடல் உறுப்புகளை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. நம் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்ப்பதன் மூலம் தொண்டை வலி, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய இயலும். கொள்ளு சாப்பிட்டால், உடல் வலிமை பெறும் என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அதற்கு அதனை அவர்கள் சரியான முறையில் சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். கொள்ளுவை விரும்பி சாப்பிட வேண்டுமெனில், அதனை குழம்பு அல்லது துவையல் செய்து சாப்பிட வேண்டும். கொள்ளுவை நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தி வரலாம். தவிர, இவற்றை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் உள்ளன. இப்படி ஏகப்பட்ட மருத்துவ பண்புகளை கொண்டுள்ள கொள்ளுவில் எப்படி துவையல் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் ருசியான் கொள்ளு பருப்பு பொங்கல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…