பொதுவாக நாம் காலையில் இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் காலையில் உட்கொள்வோம். ஆனால் இப்படி ஒரு சுழற்சி முறையில் மாறி மாறி இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமக்கே சலித்து போய்விடும் ஆகையால் புதுமையாக இனி மசாலா பொங்கல் வைத்து சாப்பிடுங்கள். நீங்கள் காலையில் இந்த மசாலா பொங்கலை வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் வீட்டில்
உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்தமான உணவாக மாறிவிடும் விரும்பி சாப்பிடுவார்கள். அதன்பின்பு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி மசாலா பொங்கலை செய்து தரச் சொல்லி கேட்பார்கள் தரமான ருசியில் இருக்கும். இன்று மசாலா பொங்கலை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் இன்று காணலாம்.
ஆகையால் புதுமையாக இனி மசாலா பொங்கல் வைத்து சாப்பிடுங்கள். நீங்கள் காலையில் இந்த மசாலா பொங்கலை வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்தமான உணவாக மாறிவிடும் விரும்பி சாப்பிடுவார்கள். அதன்பின்பு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி மசாலா பொங்கலை செய்து தரச் சொல்லி கேட்பார்கள் தரமான ருசியில் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword masala pongal, மசாலா பொங்கல்
Prep Time 20 minutesmins
Cook Time 30 minutesmins
Total Time 50 minutesmins
Servings 3people
Calories 345
Equipment
1 குக்கர்
1 கடாய்
1 பவுள்
Ingredients
குக்கரில் வேக வைக்க
1கப்பச்சரிசி
½கப்பாசி பருப்பு
2tbspஉப்பு
½tbspமஞ்சள் தூள்
2தக்காளிநறுக்கியது
3கப்தண்ணீர்
பொங்கலுக்கு மசாலா
3tbspஎண்ணெய்
1 ½tbspநெய்
1tbspகடுகு
1tbspசீரகம்
1tbspமிளகு
2பச்சை மிளகாய்
1tbspஇஞ்சிநறுக்கியது
3tbspமுந்திரி
1பெரிய வெங்காயம்நறுக்கியது
½tbspபெருங்காயத்தூள்
கருவேப்பிலைசிறிது
1 ½tbspமல்லித்தூள்
2tbspமிளகாய்த் தூள்
4tbspதுருவிய தேங்காய்
2கப்தண்ணீர்
உப்பு தேவையான அளவு
Instructions
முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொண்டு அதில் பச்ச ரிசி பாசி பருப்பு உப்பு மஞ்சள் தூள் தக்காளி பழம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
Advertisement
பின்பு குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி வைத்து விடுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு எண்ணெய் சூடு ஏறியதும் அதில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு இதனுடன் முந்திரியையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் பெருங்காயத்தூள் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்பு இதனுடன் மல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் நன்றாக மசாலா வதக்கியவுடன் துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொள்ளவும் தேங்காய் நன்றாக வெந்தவுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் பின் நன்றாக மசாலா கொதித்தவுடன் நம் குக்கரில் வேகவைத்த பச்சரிசியை இதனுடன் சேர்த்து நன்கு கொலையுமாறு கிளறி விடவும்.
பின்பு இது தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் வைத்திருக்கும் கொத்தமல்லியை சிறிது சிறிதாக வெற்றி தூவி விடுங்கள் அவ்வளவுதான் மசாலா பொங்கல் இனிதே தயாராகி விட்டது.