தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான தெத்தி குருமா செய்து சாப்பிட்டு
பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெத்தி குருமா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த தெத்தி குருமாசெய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
நாகூர் தெத்தி குருமா| Nakoor Theththi Kuruma Receipe in Tamil
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான தெத்தி குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெத்தி குருமா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த தெத்தி குருமாசெய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
நாகூர் தெத்தி குருமா செய்ய முதலில் சிக்கனை மஞ்சள்தூள் போட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு, பொரிகடலை, கசகசா ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Advertisement
ஒரு பாத்திரத்தில் தயிர்,இஞ்சி பூண்டு விழுது,மல்லித்தூள்,சீரகத்தூள், மிளகுத்தூள்,உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் கலந்து வைத்துள்ள கலவையில் சிக்கனை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பின் சோம்பு போட்டு வறுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தயிர்,இஞ்சி பூண்டு விழுது,மல்லித்தூள்,சீரகத்தூள், மிளகுத்தூள்,உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின் நறுக்கிய தக்காளியை வதக்கிக் கொள்ள வேண்டும்.
சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா ஆகியவற்றை அதில் சேர்த்து கலவையை மூடி வைக்க வேண்டும்.
மூடி வைத்திருக்கின்ற வெங்காய கலவை வெந்ததும் அதில் பிரட்டிய சிக்கனை நன்றாக கலந்து விட வேண்டும்.சிறிது தண்ணீர் சேர்த்து சிக்கனை கொதிக்க விட வேண்டும்.
சிக்கன் வந்ததும் தேங்காய் கலவையை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மிளகாய்த்தூள், எண்ணெய் நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் மிளகாய்த்தூள் கரைசலை ஊற்ற வேண்டும்.இப்பொழுது சுவையான நாகூர் தெத்தி குருமா தயார்.
Notes
குறிப்புசிக்கன் வைத்து செய்தால் இது அசைவ குருமா. சிக்கன் இல்லாமல் உருளைக்கிழங்கு இன்னும் உங்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சைவ குருமாவும் செய்து சாப்பிடலாம் அதைவிட மிகவும் சுவையாக இருக்கும்.