ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் தான். அதிலும் குறிப்பாக மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்திற்கு கருவாட்டு கிரேவி செய்யலாம். பிறகு ஒவ்வொரு வாரமும் இதையே செய்ய சொல்லும் அளவிற்கு இதன் மனமும் சுவையும் இருக்கும்.கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள்.
கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். கருவாட்டின் வாசனை பலருக்கும் அலர்ஜி என்றாலும், அதனை சமைத்து வைத்த பின் யாராக இருந்தாலும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். இன்றும் தென் தமிழகத்தில் அதிகமானோர் கருவாட்டை விரும்பி சமைக்கிறார்கள். அது உடலுக்கு நல்லதும் கூட. இதன் மணமானது அந்த தெரு முழுவதும் சுண்டி இழுக்கும் அளவிற்கு இருக்கும். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், ரசம், காரக்குழம்பு இவ்வாறான குழம்பு வகைகளை செய்து வைத்தாலும் நாம் என்றாவது ஒருநாள் செய்யும் கருவாட்டு குழம்பின் சுவை இதில் எதற்கும் இருக்காது.
கருவாட்டுக் குழம்பு என்று சொன்னவுடனே பலருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான். அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து மறுநாள் உண்டால் அதன் ருசியே தனி. குறிப்பாக கிராமப்புறங்களில் சமைக்கப்படும் கருவாட்டு குழம்பு தான் ருசியாக இருக்கும்.சுவையான கிராமத்து பால் சுறா கிரேவி செய்வது பற்றி பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான நெய் மீன் கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…