ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் தான். அதிலும் குறிப்பாக மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்திற்கு கருவாட்டு கிரேவி செய்யலாம். பிறகு ஒவ்வொரு வாரமும் இதையே செய்ய சொல்லும் அளவிற்கு இதன் மனமும் சுவையும் இருக்கும்.கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள்.
கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். கருவாட்டின் வாசனை பலருக்கும் அலர்ஜி என்றாலும், அதனை சமைத்து வைத்த பின் யாராக இருந்தாலும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். இன்றும் தென் தமிழகத்தில் அதிகமானோர் கருவாட்டை விரும்பி சமைக்கிறார்கள். அது உடலுக்கு நல்லதும் கூட. இதன் மணமானது அந்த தெரு முழுவதும் சுண்டி இழுக்கும் அளவிற்கு இருக்கும். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், ரசம், காரக்குழம்பு இவ்வாறான குழம்பு வகைகளை செய்து வைத்தாலும் நாம் என்றாவது ஒருநாள் செய்யும் கருவாட்டு குழம்பின் சுவை இதில் எதற்கும் இருக்காது.
கருவாட்டுக் குழம்பு என்று சொன்னவுடனே பலருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான். அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து மறுநாள் உண்டால் அதன் ருசியே தனி. குறிப்பாக கிராமப்புறங்களில் சமைக்கப்படும் கருவாட்டு குழம்பு தான் ருசியாக இருக்கும்.சுவையான கிராமத்து பால் சுறா கிரேவி செய்வது பற்றி பார்க்கலாம்.
பால் சுறா கருவாடு கிரேவி | Paal Sura Karuvdu Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 250 கி பால் சுறா கருவாடு
- 2 தக்காளி
- 2 பெரிய வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1/4 கப் தேங்காய் பால்
- 1/4 கப் புளி கரைசல்
செய்முறை
- முதலில் கருவாட்டை தண்ணீரில் நன்கு அலசி சிறிது நேரம் சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம், கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு பல் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின் தேங்காய் பால், புளி கரைசல் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கருவாட்டை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- கருவாடு கிரேவியில் நன்கு எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பால் சுறா கருவாட்டு கிரேவி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான நெய் மீன் கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!