உடலுக்கு வலு சேர்க்கும் சிறுதானிய பிரண்டை தோசை அருமையான சுவையில் செய்து இப்படி பாருங்கள்!!!

ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். தென

By ·

ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். தென்னிந்திய குடும்பங்கள் அனைத்தும் எப்போதும் விரும்பி சாப்பிடும் டிபன் என்றால் அது இட்லி, தோசை தான். இருப்பினும் இவற்றை சாதாரணமாக அரிசி மாவில் செய்வதை விட, சற்று வித்தியாசமாகவும், சத்தான முறையிலும் செய்து சாப்பிடலாம்.

அந்த வகையில் உங்கள் வீட்டில் சிறுதானியங்கள் இருந்தால் அதை வைத்தே சூப்பரான முறையில் தோசைக்கு மாவு தயாரிக்கலாம். காலங்காலமாக சிறுதானியப் பயறுகளை விளைவித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். சிறுதானியங்களில் அளவுக்கதிகமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றில் வகைவகையான சுவையான பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம்.

அதில் நாம் இன்று பார்க்க இருப்பது குளிர்காலத்திற்கு உகந்த சுவையான சத்தான சத்தான பிரண்டை சிறுதானிய தோசை. காரமான தேங்காய் சட்னியுடன் சூடாக பிரண்டை தோசையை வைத்து ருசி அலாதியாக இருக்கும். உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. சத்துக்கள் நிறைந்த சிறு தானியங்களை கொண்டு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஆந்திரா ஃபேமஸ் வெள்ளரிகாய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full