தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். இது சமைப்பதற்கு எளிதானதும் கூட. ஆனால், ஏனோ பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை. வெண்டைக்காயினை நாம் இவ்வாறு சமைத்து கொடுப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
இதுவரை நீங்கள் வெண்டைக்காய் கொண்டு பொரியல், புளிக்குழம்பு செய்திருக்கலாம். ஆனால் வெண்டைக்காயைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் வெண்டைக்காய் கொண்டு சட்னி செய்தால், அது இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது வெண்டைக்காய் சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மனித உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். காய்கறிகளுள் வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடலாம் அல்லது வேறு விதமாக சமைத்தும் சாப்பிடலாம்.
வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதில் குறிப்பாக கூற வேண்டுமானால், செரிமானம் மேம்படும், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும், கண்களுக்கு நல்லது, சருமத்திற்கு நல்லது, உடல் பருமனைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது மற்றும் சிறுநீரக நோயைத் தடுக்கும். வழக்கமாக இட்லி,தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி , கார சட்னி, தக்காளி சட்னி தான் செய்கின்றோம். ஒரு மாற்றாக வெண்டைக்காய் வைத்து சுவையான சட்னி செய்யலாமா? இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சத்தான மற்றும் சுவையான சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட.
இதனையும் படியுங்கள் : ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்களேன்! சுடசுட கொடுத்தா ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும். அவ்வளவு ருசி!
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…