Advertisement
ஆன்மிகம்

அமலாகி ஏகாதசி அன்று பெருமாளை எப்படி வழிப்பட வேண்டும் தெரியுமா?

Advertisement

ஏகாதசி பொதுவாக மகா விஷ்ணுவை வணங்கி அவருடைய அருளை பெறுவதற்கான ஒரு மிகச் சிறந்த நாளாகும். ஏகாதசி என்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கை நல்ல குடும்பம் பிரச்சனை இல்லாத கடன் இல்லாத வாழ்க்கை என அனைத்தையும் தருவதாக அவரே பகவத் கீதையில் குறிப்பிட்டிருக்கிறார். வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் அது வருடம் முழுக்க விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. பதினோராவது திதியில் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான நல்ல பலன்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டு ஏகாதசி விரதங்கள் வரும். ஒரு வருடத்தில் வரக்கூடிய 24 ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி க்கு அமலாகி ஏகாதசி என்று பெயர்.

இந்த 2024 ஆம் வருடம் மார்ச் 20 ஆம் தேதி எப்பொழுதும் போல் மகா சிவராத்திரிக்கும் ஹோலி பண்டிகைக்கும் இடையில் இந்த அமலாகி ஏகாதசி வருகிறது. ரங்பாரி ஏகாதசி என்று அழைக்கப்படும் இந்த ஏகாதசி நாளில் விஷ்ணுவை மட்டுமல்லாமல் சிவன் பார்வதியையும் வழிபட்டால் மிகவும் சிறந்தது. இந்த ஒரு சிறப்பான நாளில் பெருமாளை வழிபட்டால் நமக்கு என்னவெல்லாம் பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

அமலாகி ஏகாதசி அன்று பெருமாளை வழிபடும் முறையும் அதற்கான பலன்களும்

அமலாகி ஏகாதசி என்று பெருமாளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி உங்கள் திறமைகள் வெளிப்பட்டு நீங்கள் நல்ல நிலையை அடைவீர்கள்.

Advertisement

துளசி அன்னை மற்றும் மகாலட்சுமி தேவிக்கு குங்குமத்தால் அபிஷேகம் செய்தால் கணவர் மற்றும் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகள் நீங்கி சந்தோஷமாக வாழ்வார்கள்.

இந்த அமலாகி ஏகாதசி அன்று ஏழை எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து உணவு அளித்தால் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பெருமாள் நீக்குவார்.

Advertisement

இந்த நன்னாளன்று அரச மரத்திற்கு அடியில் நெய் தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் அந்த மரத்திற்கு அடியில் இணைந்து இருப்பது போல் மனதார நினைத்து வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

அமலாகி ஏகாதசி அன்று வெற்றிலையில் ‘ஓம் மகா விஷ்ணுவே நமஹ’ என்று எழுதி மாலையாக கட்டியோ அல்லது அந்த இலைகளை வைத்து பெருமாளுக்கு நேரடியாக பூஜை செய்து வழிபட்டால் உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். மேலும் அந்த வெற்றிலைகளை மறுநாள் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்திலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து விட வேண்டும்.

ஸ்ரீமத் பாவதம் படித்து பெருமாளை அமலாகி ஏகாதசி அன்று வழிபட்டால் மிகவும் சிறந்தது.

இதனையும் படியுங்கள் : ஒன்னுமில்லாத வெறும் பர்ஸ்சில் கட்டு கட்டாக பணம் சேர! வெறும் ஒரு பிரியாணி இலை இருந்தால் போதும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

1 மணி நேரம் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

1 மணி நேரம் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

2 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

2 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

4 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

5 மணி நேரங்கள் ago