ஆவணி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். குறிப்பாக தமிழ் மாதங்களின் படி தான் பயிற்சி அடைவார் அந்த வகையில் சிம்ம ராசிக்கு சூரிய பகவான் ஆவணி மாதத்தில் பயிற்சி அடைவார் சிம்ம ராசி சூரிய பகவானுக்கு உரிய ராசியாக கூறப்படுகிறது மேலும் அவருக்குரிய ராசியிலேயே அவர் ப

By ·

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். குறிப்பாக தமிழ் மாதங்களின் படி தான் பயிற்சி அடைவார் அந்த வகையில் சிம்ம ராசிக்கு சூரிய பகவான் ஆவணி மாதத்தில் பயிற்சி அடைவார் சிம்ம ராசி சூரிய பகவானுக்கு உரிய ராசியாக கூறப்படுகிறது மேலும் அவருக்குரிய ராசியிலேயே அவர் பயணம் செய்யும்பொழுது ஒரு சில ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் அதே போல் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களும் உண்டாகும் அந்த வகையில் ஆவணி மாதத்தில் இந்த சூரிய பகவானின் பெயர்ச்சியால் ஒரு சிலர் ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

ஆவணி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ஆவணி மாதத்தில் சிம்ம ராசிகள் சூரிய பகவான் செஞ்சுரிக்க போகிறார் செவ்வாய் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார் ஆவணி இரண்டாம் தேதி கன்னி ராசிக்கு சென்று இருக்கிறார் புதன் சிம்மத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் மேஷ ராசியில் இருக்கிறார் சுக்கிரன் கடக ராசியில் இருக்கிறார். சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார். ராகு பகவான் மேஷ ராசியில் இருக்கிறார் கேது பகவான் துலாம் ராசியில் இருக்கிறார். இப்படி ஒரு சஞ்சாரத்தில் தான் ஆவணி மாதம் திகழ்கிறது இந்த ஆவணி மாதத்தில் இந்த கிரகங்களின் சஞ்சாரப்படி ரிஷப ராசி, கன்னி ராசி, மகர ராசி, மீன ராசி போன்ற ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.

கடன் பிரச்சனைகள் ஏற்படலாம்

மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்காமல் இருக்க வேண்டும் யாரிடம் இருந்தும் கடன் வாங்காமல் இருக்க வேண்டும் கடன் வாங்கினாலும் அதனால் சில பாதிப்புகள் ஏற்படலாம் அதனால் கடன் வாங்கினால் அதனை உடனே திருப்பி செலுத்தி விட வேண்டும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். யாருக்காகவும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் முன் நின்று எந்த செயலையும் செய்ய வேண்டாம்.

வண்டி வாகனங்களில் கவனம் தேவை

தொழிலில் யாரையும் நம்பி அகலக்கால் எடுத்து வைக்க கூடாது முன்பின் தெரியாதவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக பேச வேண்டும் ரகசியங்களை யாரிடமும் கூறாமல் பலவீனங்களையும் யாரிடமும் கூறாமல் இருப்பது தொழிலுக்கு மிகவும் நல்லது. அதைவிட வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் வேலையிலும் முழு கவனத்தோடு இருக்க வேண்டும்.

படிப்பில் கவனம் தேவை

இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் தெய்வத்துடைய பாதங்களில் சரணடைந்து விட்டால் மிகப்பெரிய துன்பங்களும் மிக சீக்கிரத்தில் விலகிவிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். இல்லையென்றால் படிப்பில் கவனம் படிப்படியாக குறைந்து விடும். இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் முழு கவனத்தோடு எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டும். எந்த பிரச்சினைகளிலும் ஈடுபடாமல் பொறுமையோடு இருந்தால் ஆவணி மாதம் சிறப்பான மாதமாக அமையும். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவே இந்த நான்கு ராசிக்காரர்களும் ஆவணி மாதத்தில் மிகவும் கவனத்தோடு செயல்பட்டு வந்தால் குடும்பத்திலும் தொழிலிலும் மகிழ்ச்சி கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் :சூரியன் மற்றும் சனியால் கோடீஸ்வரராகும் யோகம் கிடைக்கப் போகும் ஆறு ராசிகள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை