முன்பெல்லாம் பலரது வீடுகளில் ஸ்னாக்ஸ் என்று என்று கேட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் தின்பண்டங்களையும் பழ வகைகளையும் தான் சாப்பிட தருவார்கள். உதாரணமாக நீங்கள் சிறுவயதில் இருந்த பொழுது உங்கள் வீட்டில் உங்களுக்கு அதிகமாக பழங்களை சாப்பிட கொடுத்திருப்பார்கள் அதையும் தாண்டி கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, சீடை போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை மட்டும் தான் தந்திருப்பார்கள். ஆனால் இப்போது சாப்பாட்டையே ஒரு நிமிடத்தில் தயார் செய்து சாப்பிடலாம் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். இப்படி ஆரோக்கியம் மற்ற சூழலில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!
பல ரெடிமேடு உணவுகள் இன்று சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மளிகை கடை வரை விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற பொருட்களை நீங்கள் முதலில் தவிர்த்து விடுங்கள். வீட்டில் முறையாக செய்யப்படும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு உடலுக்கு நன்மை பயக்கும் பழ வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். அந்த வகையில் இன்று ஒரு திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி நாம் இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் இன்று காணலாம்.
திராட்சைகளில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால். இந்த நார்ச்சத்துக்கள் நாம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதற்கு உதவியாக இருக்கும் மேலும் உடலில் சீரான ரத்த ஓட்டத்திற்கும் உதவியாக இருக்கும்.
திராட்சை சாப்பிடுவதால் நம்முடைய எலும்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக்கூடிய கால்சியம், விட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பொருள்கள் திராட்சையில் அதிக அளவில் காணப்படுகிறது.
திராட்சை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் முதன்மை நன்மை நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். திராட்சை பழத்தில் அதிகமாக காணப்படும் விட்டமின் சி கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளான பாக்டீரியா வைரஸ் போன்றவைக்கு எதிராக போராட நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நம் உடலில் தூங்குவதற்காக
மெலடோனின் என்ற சுரப்பி சுரக்கும். திராட்சை சாப்பிடுவதால் இந்த சுரப்பி சுரப்பதற்காக திராட்சைகள் பெரிதும் உதவியாக இருக்கும் ஆகையால் நல்ல துக்கம் வரும்.திராட்சை பழம் சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை இது அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். மேலும் திராட்சை பழம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
மேலும்
திராட்சை பழத்தை நாம் சாப்பிடுவதால் திராட்சை பழத்தில் அதிகமாக சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும். மேலும் திராட்சையில் ரெஸ்வொரட்ரோல் எனப்படும் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை பரவலை கட்டுப்படுத்தி புற்று நோய்க்கு எதிராகவும் செயல்படும்.மேலும் திராட்சையில் உள்ள ரெஸ்வொரட்ரோல் நமக்கு நரம்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் இதனால் நம்முடைய மூளை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
திராட்சை பழத்தில் உள்ள ரெஸ்வொரட்ரோல் என்ற பொருள் புற்றுநோயை தடுப்பது மட்டும் இல்லாமல் வேறொரு நன்மையும் நமக்கு செய்கிறது. இதற்கு இதயத்திற்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
இதையும் படியுங்கள் : உடல் எடையை இயற்கையாக அதிகரிக்க வேண்டுமா ? இதை செய்து சாப்பிடுங்கள்.
மேலும் திராட்சையில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்க வல்லது, சோடியம் ரத்த அழுத்த பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…
மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…
பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…
மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…