கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை குறைக்க வீட்டிலேயே சுவையான இளநீர் சர்பத் செய்து குடியுங்கள்!!

கடந்த சில தினங்களாக கோடை வெயில் காலம் ஆரம்பமாகி மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ளது. வெப்பநிலையை சமாளிப்பதற்கு உடலை நீர் சத்துக்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கோடைகால உணவுகள் மற்றும் தர்பூசணி, இளநீ

By Prem Kumar · 23/4/2026

கடந்த சில தினங்களாக கோடை வெயில் காலம் ஆரம்பமாகி மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ளது. வெப்பநிலையை சமாளிப்பதற்கு உடலை நீர் சத்துக்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கோடைகால உணவுகள் மற்றும் தர்பூசணி, இளநீர் மோர் நுங்கு போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குறிப்பாக வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தேவை. அது வெயிலின் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய இயற்கை நீர்.

பொதுவாக இளநீர் சாப்பிட்டால், உடலின் வெப்பம் தணிக்கப்பட்டு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இளநீரை சற்று வித்தியாசமாக குடிக்க நினைத்தால், இந்த சர்பத் செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த பானத்தை காலையில் அல்லது மதிய வேளையில் குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும். அதையே மதிய வேளையில் குடித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது.

அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் தான் சரியான உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம், சோடியம், கல்சியம் போன்றவற்றின் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சத்துக்கள் நிறைந்த இளநீர் வைத்து இளநீர் சர்பத் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து களைத்து போய் வரும் போது, இந்த இளநீர் சர்பத் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி குடிப்பார்கள். இப்போது சுவையான இளநீர் சர்பத் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : சுவையான நுங்கு இளநீர் ஜூஸ் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

Recipes AMP · Quick view
View full