உங்கள் வீட்டில் முருங்கைக்காய் இருந்தால் அதை வைத்து சுவையான இந்த முருங்கைக்காய் தோரன் செய்து பாருங்கள்!!!
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரபலமானது. இந்த பண்டிகையன்று நிறைய உணவுகளை தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். அப்படி படைக்கும் உணவுகளில் முருங்கைக்காய் தோரனும் ஒன்று. தோரன் என்றால் தமிழில் பொரியல் என்று பொருள். வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை பலரது வீடுகளில் சைவ உணவாக இருக்கும். அத
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரபலமானது. இந்த பண்டிகையன்று நிறைய உணவுகளை தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். அப்படி படைக்கும் உணவுகளில் முருங்கைக்காய் தோரனும் ஒன்று. தோரன் என்றால் தமிழில் பொரியல் என்று பொருள். வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை பலரது வீடுகளில் சைவ உணவாக இருக்கும். அதிலும் அன்று வைக்கும் சாம்பாரில் இருக்கும் முருங்கைக்காயை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு முருங்கைக்காயைக் கொண்டு வறுவல், குழம்பு என்று செய்து சுவைத்து போரடித்து விட்டதா? அப்படியானால் இன்று நாம் ஒரு அற்புதமான கேரள முருங்கைக்காய் ரெசிபியைக் காண்போம். அது தான் முருங்கைக்காய் தோரன்.
இது மிகவும் எளிமையான மற்றும் குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய சுவையான சைடு டிஷ். மதியம் 10 நிமிடத்தில் ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைத்தால், அதற்கு இந்த கேரளா முருங்கைக்காய் தோரன் சரியானதாக இருக்கும். இப்போது அந்த கேரளா முருங்கைக்காய் தோரனை எப்படி செய்வதென்று காண்போம். இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி.
முருங்கைக் கீரையை போல, முருங்கைக்காயிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகளும், வைட்டமின்கள் உள்ளிட்ட பிற சத்துகளும் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுவடையும். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும். இந்த நன்மைகளை பெற, முருங்கைக்காயை தோரன் வடிவில் உண்ணுவது சிறப்பாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்போருக்கு முருங்கைக்காய் தோரன் செய்து கொடுங்கள். இந்த முருங்கைக்காய் தோரன் சற்று காரம் குறைவாக இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!