கடவுளுக்கு படைக்கக்கூடிய தேங்காய் வாழைப்பழத்தின் ரகசியம்!

நாம் எப்பொழுதுமே தெய்வத்தை வணங்கும்போது அவருக்கு பூக்கள் தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு அனைத்தையும் வைத்து வணங்குவோம் அப்படி நாம் வழிபாடு செய்யும்போது நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். இந்த உலகத்தில் பூக்கின்ற ஒரு சில பூக்களில் கூட தெய்வத்தின் பெயர்தான் எழுதி இருக்குமாம். என்ன

By Prem Kumar · 13/9/2024

நாம் எப்பொழுதுமே தெய்வத்தை வணங்கும்போது அவருக்கு பூக்கள் தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு அனைத்தையும் வைத்து வணங்குவோம் அப்படி நாம் வழிபாடு செய்யும்போது நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். இந்த உலகத்தில் பூக்கின்ற ஒரு சில பூக்களில் கூட தெய்வத்தின் பெயர்தான் எழுதி இருக்குமாம். என்னதான் தலைகீழாக நின்றாலும் யாருக்கு அதை படைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவர்களுக்கு தான் அது போய் சேரும். அதேபோல் பெரும்பாலான பூஜைகளில் தேங்காய் வாழைப்பழம் இரண்டும் இல்லாமல் இருக்கவே இருக்காது ஏன் இந்த தேங்காய் வாழைப்பழத்தை படைத்த தெய்வத்தை வழிபடுகிறோம் என்று ஒரு சில பேர் யோசித்தது உண்டு. ஆனால் இதற்கு ஒரு ஸ்பெஷல் உள்ளது அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

முக்கனிகள்

இந்த உலகத்தில் பலவகையான கனிகள் இருந்தாலும் மா பலா வாழை என முக்கனிகளில் வாழைப்பழத்திற்கு மட்டும் தனியான ஒரு சிறப்பு உண்டு. மிகவும் எளிதாக மிகவும் விலை குறைந்து ஏழை எளிய மக்களுக்கும் கூட கிடைக்கும் கனியாக விளங்க கூடியது வாழைப்பழம்தான். நாம் இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை கீழே போட்டாலும் கூட அதில் இருந்து வாழும் மரம் வராது மற்ற பழங்களைப் போல் இல்லாமல் இதற்கு நிறைய சிறப்புகள் உள்ளது.

தேங்காயின் சிறப்புகள்

அதேபோல தேங்காய் நாம் சாப்பிட்டுவிட்டு அதனுடைய சிரட்டையை கீழே போட்டாலும் அல்லது சிறிய தேங்காய் துண்டு கீரை போட்டாலும் அதிலிருந்து தென்னை மரம் முளைத்து விடாது. இந்த இரண்டிற்கு மேல் இதுதான் ஒரு முக்கிய புனிதமாக இருக்கிறது. அவ்வளவு எளிதாக இதனை நாம் வளர்த்து விட முடியாது. அதனால்தான் இந்த வாழைப்பழமும் தேங்காயும் புனிதம் வாய்ந்த பொருட்களாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது. தேங்காயில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்த நெர்முறைய ஆற்றலை கொடுக்கக்கூடிய ஒரு சக்தி உள்ளது மேலும் தேங்காயில் உள்ள மூன்று கண்கள் சிவபெருமானை நினைவு கூற வைக்கிறது. வன்மம் மாயை ஆணவம் போன்ற மூன்றையும் வழித்த இறைவனுடைய பாதத்தில் நாம் சரணடைகிறோம் என்பதை குறிக்கவே தேங்காய் கடவுளுக்கு படைக்கப்படுகிறது.

வாழைப்பழத்தின் சிறப்புகள்

பொதுவாக நாம் பூஜைக்கு வாழையிலை விரித்து தான் அதில் படைகள் போடுவோம் வாழைப்பழத்தை போலவே வாழ இறைவனும் நிறைய பாக்டீரியாக்களை அளிக்கக்கூடிய தன்மை உள்ளது அதனால் தான் நாம் எந்த ஒரு நெய்வேத்தியத்தையும் வாழை இலையில் படைத்து பரிமாறுகிறோம் இந்த மகத்துவம் வாய்ந்த வாழை மரத்தையும் தென்னை மரத்தையும் வீட்டில் வளர்த்தால் கூட வீட்டிற்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வாழையடி வாழையாக நம்முடைய வம்சம் தயாரிப்பதற்கு வாழும் மரத்தையும் வாழ்க்கை உயர்ந்து நன்றாக செழித்து இருக்க தென்னை மரத்தையும் வீட்டில் கட்டாயமாக வளர்க்க வேண்டும். இந்த இரண்டையும் நாம் உணவு சேர்ந்து கொள்வதாலும் நமக்கு உடலில் இருக்க பல வியாதிகள் குணமாகும். வாழை மரத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களும் மிகவும் ஆரோக்கியமானது அதேபோலதான் தென்னை மரமும் தென்னை மரத்தில் இருக்கக்கூடிய அனைத்து பாகங்களுமே பயன்படக்கூடியது மட்டுமே வீணாக எதையும் தூக்கி எறிய முடியாது. எனவே இந்த இரண்டின் மகத்துவத்தையும் புரிந்து கொண்டு இதனை வீட்டில் பயன்படுத்தலாம் ஒவ்வொரு பூஜையிலும் தவறாமல் இதனை வைத்து வழிபாடு செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : வேண்டுதல்களை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு!

Recipes AMP · Quick view
View full