சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!

பலருக்கும் காய்கறி என்றாலே கசப்பான விஷயம் தான். யாரும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஒரு சிலர் உடலுக்கு ஊட்டச்சத்து வேண்டுமே என்று சாப்பிடுகிறார்கள். ஒருசிலர் எதுவானாலும் பரவாயில்லை என்று இவற்றை ஒதுக்கவே முயற்சி செய்வார்கள். அவ்வாறு பலரும் விரும்பப்படாத ஒரு காய் புடலங்காய். ஒரு

By Prem Kumar · 25/12/2023

பலருக்கும் காய்கறி என்றாலே கசப்பான விஷயம் தான். யாரும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஒரு சிலர் உடலுக்கு ஊட்டச்சத்து வேண்டுமே என்று சாப்பிடுகிறார்கள். ஒருசிலர் எதுவானாலும் பரவாயில்லை என்று இவற்றை ஒதுக்கவே முயற்சி செய்வார்கள். அவ்வாறு பலரும் விரும்பப்படாத ஒரு காய் புடலங்காய். ஒரு சில வீடுகளில் இவற்றை சமைத்து இருக்கவே மாட்டார்கள்.

ஆனால் இந்த புடலங்காயில் நீர் சத்து அதிகமாக இருக்கிறது. உடல் உஷ்ணத்தை குறைக்க வல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. அவ்வாறு இந்த புடலங்காயை மிகவும் சுவையாக எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பசியைத் தூண்டும். * குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். நாம் சாப்பிடும் உணவு வகைகளும் நீர் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.

நீர்ச் சத்து நிறைந்த காய்கறி புடலங்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற பல காய்கறிகள் இருக்கின்றன. இவற்றை பொரியல் செய்தும் சாப்பிடலாம். அல்லது இவற்றுடன் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். இந்த புடலங்காய் வைத்து புடலங்காய் மசாலா பொரியல் அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதாக இருந்தால் புடலங்காய் மசாலா பொரியல் செய்வது தான் சிறந்த முறையாகும், அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இப்படி ஒரு சுவையான புடலங்காய் மசாலா பொரியல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

Recipes AMP · Quick view
View full