பூஜையறையில் இந்த 7 பொருட்கள் இருந்தால் வெற்றி நிச்சயம்!

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதும், தரித்திரம் சூழ்வதும் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதில் அது அடங்கியுள்ளது. நாம் நமது வீட்டில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயங்கள் நமது வீட்டில் மகாலட்ச

By Prem Kumar · 8/8/2024

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதும், தரித்திரம் சூழ்வதும் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதில் அது அடங்கியுள்ளது. நாம் நமது வீட்டில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயங்கள் நமது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் லக்ஷ்மி கடாட்சத்துடன் சுபீட்சமாக இருக்க, நோய் நொடி இல்லாமல், வறுமை இல்லாமல், மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருக்க வீட்டின் அமைப்பானது சரியாக அமைந்திருக்க வேண்டும்.

ஒரு வீட்டில் பூஜை அறை முதன்மையானது, அடுத்ததாக பார்க்க வேண்டியது சமையலறை தான். நம்முடைய வீட்டின் பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்க செய்யும் இடங்களில் முக்கியமான ஒன்று பூஜை அறை. வீட்டில் எப்போதும் தெய்வீக தன்மையும், பாசிடிவ் எனர்ஜியும் நிறைந்திருக்க பூஜை அறையை எப்படி வைத்திருக்கிறோம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் சுவாமி படங்களை தாண்டி பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருட்கள், வழிபடும் முறைகள் என சில உள்ளன. இந்த முறையில் நம்முடைய தினசரி வழிபாட்டினை மேற்கொண்டால் வீட்டில் நன்மைகள் பெருகுவதுடன், தெய்வத்தின் அருள் எப்போதும் நிறைந்திருக்கும்.

தீபம்

இந்துக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது ஒரு வழக்கமாக இருக்கிறது. காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றுவது நன்மையாக கருதப்படுகிறது. குறிப்பாக பூஜையறையில் விளக்கேற்றுவதும். பூஜை அறையில் தீபம் அல்லது விளக்கை ஏற்றுவது தெய்வீக ஆசீர்வாதங்களை அழைப்பதையும், ஒருவரின் சுற்றுப்புறத்திலிருந்து எதிர்மறையை அகற்றுவதையும் குறிக்கிறது. தினமும் காலை வேளையில் குளித்துவிட்டு முதலில் தீபம் ஏற்றி பூஜை செய்து அடுத்த வேலைகளை துவங்குவது என்பது குடும்பத்திற்கு அதிக நன்மையை சேர்க்கிறது.

ஊதுபத்திகள்

பல புராணங்கள் மற்றும் ஹிந்து சடங்குகளில், பூஜையின் போது ஊதுபதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்து பாரம்பரியத்தில் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியில் இருந்து வரும் புகையானது, மனதை தூய்மைப்படுத்தும் குணத்தை கொண்டதாக கருதப்படுகிறது. எனவே, பூஜையறையில் ஊதுபத்திகள், சாம்பிராணிகள் போன்றவற்றை எரிப்பது மிகவும் நல்லது. ஊதுபத்திகள் இருக்கும் இடத்தில் ஒரு மகிழ்ச்சியான நறுமணத்தை ஏற்படுத்தும். அதனால் பூஜையறையில் ஊதுபத்திகள் இருப்பது மனதை அமைதியாக்கி, ஒரு தெய்வீகமான சூழலை உருவாக்க உதவுகிறது.

மணி

பூஜையின்போது மணியோசை எழுப்புவது மிகவும் முக்கியமான ஒன்று. இது புனிதமான சூழ்நிலையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், இதை பூஜையறையில் வைத்திருக்க வேண்டும். இது சிறப்பு சமயங்களில் அடிக்கப்படும் முக்கியமான கருவியாகும். மணியின் ஒலி பூஜையின் போது ஆன்மீகத் துலக்கத்தை அதிகரிக்கவும், மனதை ஒருமைப்பாட்டுடன் பூஜை மீது கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மணியின் ஒலி ஆற்றலை நேர்மறையாக மாற்றுவதில் உதவுகிறது. இது நமது மனதில் நன்றியுணர்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துகிறது.

நீர்

பூஜையறையில் கங்கை நீர் அல்லது ஏதாவது ஒரு புனிதமான நதியின் நீரை வைத்திருப்பது மிகவும் நல்லது. இந்த புனித நீர் பூஜையறையை சுத்தீகரித்து, பாதுகாப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. புனித நீரை பூஜையறையில் வைக்க முடியாதவர்கள், ஒரு டம்ளரில் வீட்டில் உள்ள தண்ணீரை வைக்கலாம். பொதுவாக பூஜையறையில் தண்ணீர் வைப்பது, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வைக்கப்படுகிறது. அதனால் பூஜையறையில் தண்ணீர் வைப்பதன் மூலம், நம் வீட்டிற்குள் செல்வத்தையும், ஐஸ்வர்யத்தையும் கொண்டு வர முடியும்.

புனித நூல்கள்

பூஜையறையில் எப்போதும் பகவத் கீதை, ராமாயணம் அல்லது பிற புனித நூல்களை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணரின் போதனைகளை உள்ளடக்கிய ஒரு புனித நூலான பகவத் கீதை, காலத்தால் அழியாத ஆன்மீக உன்னதமானதாகக் கருதப்படுகிறது. இதேபோல், ராமாயணம் ராமரின் வாழ்க்கை மற்றும் சாகசங்களை விவரிக்கும் ஒரு பழங்கால காவியம், இந்த நூல்கள் மனிதனுக்கு ஆன்மீக வழிகாட்டியாக செயல்படுகிறது. இதனை பூஜையறையில் வைத்திருப்பது கூடுதல் நன்மை பயக்கும்.

சுவாமி சிலைகள்

பூஜை என்பது தெய்வங்களுக்காக செய்யப்படுவதால், விநாயகர், லட்சுமி தேவி, சிவன், ராமர் குடும்பம் ஆகிய சிலைகளை பூஜையறையில் வைத்திருப்பது புனிதமான சூழலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. யானைத் தலைக் கடவுளான விநாயகர், தடைகளை நீக்கி வெற்றி மற்றும் செழிப்புக்கான முன்னோடியாக வழிபடப்படுகிறார். பூஜை அறையில் ஒரு பித்தளை விநாயகர் சிலையை வைத்திருப்பது, நல்ல தொடக்கங்கள் அமைய வழிவகுக்கும்.

இதனையும் படியுங்கள் : பூஜையறையில் தினமும் கோலம் ‌போடுபவரா ? அப்போ இந்த ‌ஒரு பொருளை மட்டும் கோலமாவில் சேருங்கள்!

Recipes AMP · Quick view
View full