பொதுவாக நாம் என்ன சாப்பாடு சாப்பிட்டாலும் அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி சாப்பிட்டு முடித்தவுடன் ரசம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றும் காரணம் நாம் வயிறு முழுவதும் அஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ரசம் அந்த உணவுகளை ஜீரணம் ஆகிவிடும்.
ஆனால் என்னதான் பல உணவுகளை நன்றாக சமைத்தாலும் ரசம் ஒரு சிலருக்கு சுவையாக வராது எனவே சுவையாக அருமையாக ஒரு தக்காளி மிளகு ரசம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் இதில் மிளகு சேர்த்து உள்ளதால் இப்போதுள்ள மழைக்காலத்திற்கு ஏதுவாக சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற ஒரு ரசமாக இருக்கும்.
இதில் உள்ள சீரகம் நம் செரிமான மண்டலத்தை சீராக்கும் அஜீரணம் ஆகாத உணவுகளையும் ஜீரணம் ஆகிவிடும் மேலும் நாம் இதில் சேர்க்கும் கொத்தமல்லி இலைகள் நம் உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும் இவ்வளவு நன்மைகளும் இருக்கும் தக்காளி மிளகு ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க
தக்காளி மிளகு ரசம் | Tomato Pepper Rasam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 பற்கள் பூண்டு
- புளி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 2 தக்காளி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- கொத்தமல்லி இலைகள் தேவையான அளவு
- 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
- 3/4 ஸ்பூன் சீரகத்தூள்
- 3 காய்ந்த மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- கறிவேப்பிலை தேவையான அளவு
செய்முறை
- முதலில் புளியை ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்துஎடுத்து வைத்துக் கொள்ளவும். அந்த புளி கரைசலில் எடுத்து வைத்துள்ள தக்காளியை நசுக்கி கரைத்துக் கொள்ளவும்
- இப்பொழுது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பத்துப்பற்கள் பூண்டை இடித்து சேர்த்துக் கொண்டு சிறிதளவு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- கரைத்து வைத்துள்ள புளி தக்காளி கரைசலை கடாயில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- அந்த புளிக்கரைசல் நன்றாக கொதித்தவுடன் அதில் எடுத்து வைத்துள்ள மிளகுத்தூள் சீரகத்தூள் மறுபடியும் சிறிதளவு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை மல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி மிளகு ரசம் தயார்