மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன் மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். நவ கிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார்.
இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் கல்வியை அறிவு நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக அவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புத்திக்கூர்மை, வியாபாரம், பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு அதிபதியான புதன் அஸ்தமனத்தில் இருந்து உதயமாகிறார். இந்த உதயம் பலருக்கு உற்சாகமானதாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
இழுபறியாக இருந்த வழக்குகளுக்கு முடிவு வருவது பிரச்சனையாக இருக்கும். துலாம் ராசியினருக்கு தடையாக பல இன்னல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. கடுமையான போட்டியினால் மன அழுத்தத்தை எதிர் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. குடும்பத்தில் பரஸ்பர புரிதல் இல்லாததால் மன அழுத்தம் உருவாகலாம். தாயின் உடல்நலம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபம் உண்டாகும். கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த சில பணிகள் பாதகமான முடிவுகளை தரும். வேலையில் தடைகளையும், அதிக போட்டியையும் சந்திக்க நேரிடும். கவனக்குறைவால் பயணத்தின் போது இழப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் இளைய உடன்பிறந்தவர்களுடனான உறவில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பயணங்கள் செய்யும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. கெட்ட சகவாசங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிக ராசிக்காரர்கள் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் தகராறு வைத்துக் கொள்ள வேண்டாம். வீண் செலவுகளால் இழப்புகளை சந்திக்க நேரிடும். உறவுகளில், புரிதல் இல்லாததால் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கண் எரிச்சல் மற்றும் வலியால் பாதிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவு செய்யலாம். நிதி விஷயங்களில், நீங்கள் பட்ஜெட்டை உருவாக்கி நடக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலத்தில் கடக ராசிக்காரர்கள் அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான விரயங்கள் மனக்கவலையை அதிகரிக்கும். முதலீடு குறித்த எண்ணங்கள் வந்தாலும், அவற்றை ஒத்திபோடவும். வியாபாரத்தில் லாபம் குறையலாம், எனவே கடுமையாக உழைக்க வேண்டியிருக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மனதளவில் காயத்தை ஏற்படுத்தலாம். உங்கள் ஜாதகத்தில் புதனின் இந்த நிலை சாதகமாக கருதப்படவில்லை, சில காரணங்களால் சமூகத்தில் அவதூறு ஏற்படலாம்.
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்ல வேண்டிய காலம். வாக்குறுதி கொடுப்பதற்கு முன் சிந்தித்து முடிவெடுக்கவும். தொழிலில், அதிக வேலை பளுவினால், மனஅழுத்தம் மற்றும் மேலதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அவமானத்தை அனுபவிக்க நேரிடும். வியாபாரத்தில், கடுமையான போட்டி காரணமாக லாபம் குறையும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து மிகவும் கவலையாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இதனையும் படியுங்கள் : ஜூன் 30 2024 அன்று நடக்கவிருக்கும் சனி வக்ர பெயர்ச்சியால் வாழ்க்கையில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கப்போகிற ராசிக்காரர்கள் இவர்கள் தான்!
மேஷம் உடல்நலம் நன்றாக இருக்கும். கடந்த காலங்களில், நீங்கள் முதலீடு செய்த பணத்தின் பலனை இன்று பெறுவீர்கள். இன்று சில…
பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று…
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…
குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில்…
குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன்…
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…