தினமும் கருவேப்பிலை சாப்பிட வேண்டும். அதேசமயம் கருவேப்பிலையை சாப்பிட எந்த சிரமமும் இருக்கக்கூடாது. அந்த கருவேப்பிலை ரெசிபி நாவிற்கு ருசியாகவும் இருக்க வேண்டும். முடி அதிகமாக வளர வேண்டும். இப்படி உங்களுக்கு எந்த தேவை இருந்தாலும் சரி இந்த கருவேப்பிலையை தொக்கு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலை எண்ணற்ற நன்மைகளை கொண்டது. ஆனால் அதை பெரும்பாலும் சாப்பிடும்போது தேவையற்ற பொருளாக ஒதுக்கி வைத்து விடுவோம். இதனால் அதன் நன்மைகளை பெற முடியாமலே போகும். எனவே இந்த கறிவேப்பிலை தொக்கு இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். இப்படி தொக்கு வைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். அதன் நன்மைகளும் முழுமையாக கிடைக்கும்.
இந்த கருவேப்பிலை தொக்கை சுடச்சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் பிரட் மேலே அப்படியே ஜாம் போல தடவையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் இதை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. அது மட்டுமின்றி இதை ஒரு முறை செய்து கை படாமல் அப்படியே ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் இதை சுமார் ஒரு மாதம் வரை வைத்து நாம் பயன்படுத்தலாம். இன்ஸ்டன்ட் ஆக இப்படி கறிவேப்பிலை வைத்து இப்படி ஒரு தொக்கு நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் திடீரென எதுவும் இல்லாத போது தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்!
கறிவேப்பிலை தொக்கு | Curry Leaves Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கப் கறிவேப்பிலை
- புளி எலுமிச்சை அளவு
- 10 பல் பூண்டு
- 15 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் வெல்லம்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் தனியா
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கறிவேப்பிலை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் கடுகு, வெந்தயம், தனியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின் மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலையை சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டை தட்டி சேர்த்து வதக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அதன்பிறகு கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கறிவேப்பிலை தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மிகவும் சுவையான கறிவேப்பிலை வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்கள் இரண்டு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!