பொதுவா நம்ம வீட்ல மதியம் செஞ்ச சாதம் மிந்து போயிடுச்சு அப்படின்னா அதுல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் அப்படி இல்லன்னா அந்த பழைய சாதத்தை பிழிஞ்சு வச்சு மிளகாய் தூள் சீரகம் உப்பெல்லாம் சேர்த்து வடகம் மாதிரி வெயில்ல காய வச்சு எடுத்து பொரிச்சு சாப்பிடுவோம். ஆனா இனிமேல் உங்க வீட்ல மதியம் செஞ்ச சாதம் மீந்து போயிடுச்சு அப்படின்னா நைட்டுக்கு சுட சுட முட்டை சோறு செஞ்சு கொடுங்க சட்டுனு பத்து நிமிஷத்துல எல்லா சாதமும் காலி ஆகிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய முட்டை சோறு தான் இப்ப பாக்க போறோம்.
பொது வாழ்ந்த முட்டை சாதம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க ஒருத்தர் மசாலா எதுவுமே சேர்க்காமல் பிளேனா செய்வாங்க. ஒவ்வொருத்தவங்க மசாலா எல்லாம் சேர்த்து செய்வாங்க. அந்த வகையில இப்ப நம்ம மசாலா எல்லாம் சேர்த்து நல்லா காரசாரமா சைட் டிஷ் எதுவுமே தேவைப்படாமல் அப்படியே சாப்பிடக்கூடிய முட்டை சோறு தான் செய்யப் போறோம். இந்த முட்டை சோறு நைட்டுக்கு மட்டும்தான் நம்ம பழைய சாதத்தில் செய்யணும் அப்படின்ற அவசியம் இல்ல காலையில செஞ்சு கூட குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து விடலாம் லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும் அந்த அளவுக்கு இந்த முட்டை சோறு ரொம்ப டேஸ்டா இருக்கும்.
குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நாலு முட்டை இருந்தா போதும் டக்குனு இந்த முட்டை சோறு செஞ்சு முடிச்சிடலாம். சுட சுட ஆவி பறக்க எடுத்து சாப்டா இந்த முட்டை சோறுக்கு எந்த சைடு டிஷ்ஷூம் தேவையில்லை.இப்ப வாங்க இந்த சுவையான அட்டகாசமான முட்டை சோறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Egg Rice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 கப் சாதம்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கொத்து கருவேப்பிலை
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் தாராளமாக ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் தாராளமாக ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
- தக்காளியையும் சேர்த்து நன்றாக குழைவாக வதக்கி எடுக்கவும்.
- பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவும்
- இதனை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு கடாயில் மற்றொரு பக்கம் 4 முட்டைகளை உடைத்து நன்றாக கிளறி முட்டை வெந்தவுடன் மசாலாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
- பிறகு ஆரிய உதிரி உதிரியான சாதத்தை அதில் போட்டு கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையானமுட்டை சோறு தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : காரசாரமான எக் கீமா தோசை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஜம்முனு இருக்கும்!