Home ஆன்மிகம் கையில் 10 ரூபாய் இல்லாதவன் வீட்டில் கூட பணம் சேரும் சமையல் அறையில் அவசியம்...

கையில் 10 ரூபாய் இல்லாதவன் வீட்டில் கூட பணம் சேரும் சமையல் அறையில் அவசியம் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்!

இன்றைய நவீன வீட்டில் சமையல் அறையே அனைத்து செயல்பாட்டின் மையப் புள்ளியாக உள்ளது. சமையலறைகள்தான் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து சமைக்கவும், நண்பர்கள், குடும்பத்தினருடன் நன்கு பழகவும் உகந்த இடமாக நன்கு வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அக்னி தேவன் அல்லது நெருப்புக் கடவுளின் இருப்பிடமான தென்கிழக்கு மூலையே வாஸ்து முறைப்படி, வீட்டின் சமையல் அறைக்கு உகந்த திசையாகும். எனவே, வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி, மேலே சொல்லப்பட்டுள்ள திசையில் சமையல் அறை அமைப்பது சிறந்ததாகும்.

-விளம்பரம்-

வாஸ்து முறைப்படி கிழக்கு நோக்கிய வீட்டிற்கு தென் கிழக்கு திசையே சமையலறைக்கு ஏற்ற திசையாகும். ஒருவேளை சமையல் அறைக்கு இந்த திசையில் கட்டுமானம் அமைக்க முடியவில்லை எனில், நாம் வடமேற்கு திசையில் சமையலறை அமைக்கலாம். ஆனால் வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் சமையல் அறை அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

சமையலறை நிறம்

சமையலறை தான் முழு வீட்டிற்கும் தேவையான மையங்கள் அல்லது ஆற்றல் ஆதாரங்களில் ஒன்றாகும். வண்ண கலவைகள் ஏற்பாட்டிற்கு எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைப் பொறுத்து, சமையலறையில் சமைப்பது உற்சாகமாகவோ அல்லது அமைதியாகவோ இருக்கும். உகந்த சமையலறை நிறங்களுள் ஒன்று சிவப்பு ஆரஞ்சு.

உபயோகம் இல்லாத பொருட்கள்

சமையலறை அன்னை லட்சுமி இருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே, உங்கள் சமையலறை தென்கிழக்கு திசையை நோக்கி இருப்பதை உறுதிப்படுத்தவும். அதே போல, சமையலறையில் நீங்கள் உபயோகப்படுத்தாத பொருட்களை வைக்க வேண்டாம். அது, உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். அதே போல, சமையலறை எவ்வளவு அகலமாக இருக்கிறதோ, அவ்வளவு பண வரவும், அன்னபூரணியின் அருளும் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

உடைந்த பொருட்கள்

சமையலறையில் உடைந்த அல்லது இயங்காத பொருட்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இத்தகைய பொருட்கள் எதிர்மறையான, அழுத்தமான ஆற்றலை வீட்டிற்குள் வெளியிடுகின்றன மற்றும் நிதி ஆதாயத்திற்கு தடைகளை உருவாக்குகின்றன. பணத்தை வீணாக்காமல் இருக்க, கசியும் குழாயை சரிசெய்ய மறக்காதீர்கள்.

-விளம்பரம்-

அக்னி மூலை

பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது. கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட மூலை தென்கிழக்கு மூலையாகும். இதனை அக்னி மூலை என்றும் கூறுவர். வீட்டில் அக்னி மூலை சரியாக இருந்தால் தான் பண புழக்கம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் பண வரவு தடைபடும். கடன் அதிகரிக்கும்.

பண‌ வரவை தரும் வெந்தயம்

சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை நம் வசம் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். எனவே உங்கள் கிச்சனில் அரிசி, பருப்புடன் வெந்தயமும் எப்போதும் நிறைவாக வைத்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-