நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம்.
வெண்டக்காய் காரகுழம்பு என்பது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு காரமான குழம்பு வகையாகும். முருங்கைக்காய், கத்தரிக்காய், பூண்டு போன்ற காய்கறிகளைக் கொண்டு காரகுழம்பு வகைகளை செய்யலாம், ஒவ்வொரு காய்கறியும் குழம்புக்கு தனிச் சுவையைத் தருகிறது, அதேபோல் வெண்டைக்காய் காரகுழம்பு அனைத்து வகையான கூட்டு மற்றும் பொரியலுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். புளி குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது . அதுலையும் வெண்டைக்காய் புளி குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல இருக்கும். சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். கிராமத்து சுவை மாறாமல் வெண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வெண்டைக்காய் காரக்குழம்பு | Ladies Finger Kaarakulambu
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி வெண்டைக்காய்
- புளி எலுமிச்சை அளவு
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
அரைக்க
- 10 சாம்பார் வெங்காயம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 மூடி தேங்காய்
செய்முறை
- முதலில் வெண்டைக்காயை கழுவி ஒரு துணியில் துடைத்து விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். புளியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காய், பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம், வெண்டைக்காய் வதங்கியதும் அதை தனியாக எடுத்து வைத்து விடவும். பின்னர் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் மிளகாய் தூள், காஷ்மீர்மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போது அத்துடன் தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- குழம்பின் பச்சை வாசனை போன பிறகு அதில் வெண்டைக்காய் சேர்த்து வேகவிடவும். வெண்டைக்காய் ஏற்கனவே வதக்கி இருப்பதால் அது பாதி வெந்திருக்கும் அதனால் சிறிது நேரம் வேக விட்டால் போதுமானது.
- குழம்பு கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சுவையான, காரசாரமான கிராமத்து வெண்டைக்காய் கார குழம்பு தயார்.