நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கையும் ஒன்று. மொத்த மரமே மருத்துவ குணம் வாய்ந்தது என்றால் அது முருங்கை, முருங்கை இலையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும்.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முருங்கை இலைகளை அடிக்கடி சாப்பிட முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வரும் இந்த முருங்கை மரத்தின் இலைகளை காய வைத்து, பொடியாக்கி காலை வேளையில் தேநீரில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்.
நோய் தொற்றுகளின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசிமான ஒன்றாக உள்ளது. முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அந்த வகையில் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் முருங்கை கீரையில் எப்படி சுவையான குழம்பு வைக்கலாம் என்று இன்று பார்க்கலாம்.
முருங்கைக் கீரையை வைத்து முருங்கைக் கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை முருங்கைக்கீரையில் இப்படி குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும்.
முருங்கை கீரை குழம்பு | Murungai Keerai Kulambu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு முருங்கை கீரை
- 3 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
செய்முறை
- முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் ஒரு மிக்சி ஜாரில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின் சாம்பார் தூள், உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- குழம்பு நன்கு கொதித்து மசாலா வாசனை போனதும் முருங்கை கீரையை சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கை கீரை குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான முருங்கைப்பூ சாதம் இப்படி ஒரு தரம் வீட்டில் செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி!