தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை, டபுள்டக்கர் தோசை, காளான் தோசை இப்படி பல வெரைட்டிகளில் தோசை கிடைக்கிறது. அருமையான பன்னீர் தோசை செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த பன்னீர் தோசை.
இந்த பன்னீர் தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த பன்னீர் தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பன்னீர் தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம். இந்த பன்னீர் தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி பன்னீர் தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா பன்னீர் தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.
நம்ம சைவ பிரியர்களுக்கு இந்த மாதிரி சைவத்தில் ஏதாவது வித்தியாசமா செய்து கொடுக்கும்போது தான் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த தோசைக்கு எந்த ஒரு சட்னியோ சாம்பாரோ தேவையே கிடையாது. இந்த தோசையில் இருக்கிறது அப்படியே நம்ம சாப்பிட்டுக்கலாம். ரொம்பவே சுவையா இருக்கும் இந்த பன்னீர் தோசை. சரி வாங்க இந்த பன்னீர் தோசை எப்படி சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
பன்னீர் தோசை | Paneer Dosai Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் பன்னீர்
- 1 கப் இட்லி மாவு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- புதினா
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லிதூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1/2 ஸ்பூன் கரமசாலா
- 1/2 கப் தேங்காய்துருவல்
- 2 பச்சைமிளகாய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 6 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 ஸ்பூன் கசகசா
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- எண்ணெய் தேவையான அளவு
- 1 துண்டு பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 சோம்பு
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு சிறுது நேரம் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- பன்னீர் வேகும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை பன்னீரில் சேர்த்து நன்றாக மூடி போட்டு பச்சை வாசனை போகும் வரை கலந்து விடவும்.
- பன்னீர் மசாலா நன்றாக வெந்து வந்து பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்துஅதன். மீது தோசை மாவை தோசையாக ஊற்றி அதன் மேல் பன்னீர் மசாலாவை தடவி ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போடாமல் தோசைய மடித்து எடுக்கவேண்டும்.
- தோசை வெந்து பிறகு எடுத்து இந்த தோசையை சூடாக பரிமாறினால் சுவையான பன்னீர் தோசை தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!