மணக்க மணக்க பன்னீர் புதினா புலாவ் இப்படி செய்து பாருங்கள் பிரியாணியின் சுவை கூட தோற்றுப்போய் விடும்!!!
சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில்
சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது.
வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் புதினா புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. புதினா நறுமனத்திற்கு மட்டும் சேர்த்து கொள்ளமால் அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கோடையில் வெப்பநிலை உயராமல் உங்கள் உடலைப் பாதுகாக்க இது பயன் உள்ளதாக இருக்கும். புதினாவில் மிக எளிதாக செரிமானமாகி, பசியை தூண்டும். புதினாவில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது.
உங்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், சருமத்தை நீரேற்றம் செய்யவும், வயதான அறிகுறிகளை வரவிடாமால் தடுக்கும். புதினா சாப்பிடுவது உங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான தக்காளி புலாவ் இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிப்பார்கள்!