புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணவுகள் பிரபலமாக இருக்கும். அந்த வகையில் மும்பையில் செய்யப்படும் தக்காளி புலால் செம ருசியாக இருக்கும். இவை பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் தக்காளி புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது.
அதனின் பெயருக்கு ஏற்றவாரே இதில் தக்காளி சுவையே பிரதானமாக இருக்கும். குறைந்த நேரத்தில் மிக எளிதாக சமைக்கக் கூடிய ஒரு அட்டகாசமான உணவு வகை இவை. அதனால் திடீரென ஒரு வித்தியாசமான உணவு சமைத்து உண்ண வேண்டும் என்று தோன்றினால் இதை செய்து சுவைக்கலாம். பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவாக இந்த தக்காளி புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். புலாவ் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
தக்காளி புலாவ் | Tomato Pulao Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 2 கப் தக்காளி
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 1/2 கப் பாசுமதி அரிசி
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
அரைக்க :
- 4 பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 1/4 கப் கொத்தமல்லி, புதினா
- 1/4 கப் வெங்காயம்
செய்முறை
- முதலில், இஞ்சி, பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலந்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் அரிசியை தண்ணீர் வடிந்து சேர்த்து கலந்து விடவும்.
- அரிசிக்கு தேவையான அளவு தண்ணிர் சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி புலாவ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான பச்சை மிளகாய் தக்காளி தொக்கு இப்பட செய்து பாருங்க! சாதத்துடன் பிரட்டி சாப்பிட பக்காவாக இருக்கும்!