இந்த உலகில் ஏழ்மையில் வாழ்வது என்பது ஒரு கொடுமையான வாழ்க்கை. பண கஷ்டம், கடன் தொல்லை, இப்படி அவர்கள் வாழும் வாழ்க்கையே யாராலும் வாழ முடியாது. ஏழ்மையில் இருப்பவர்களின் வீட்டில் சந்தோஷம் இருக்காது, நிம்மதி இருக்காது, முக்கியமாக மன நிம்மதி என்று ஒன்று அவர்களிடம் இருக்கவே இருக்காது. அந்த அளவிற்கு ஒரு கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு சிறிய சந்தோஷத்தை கூட அவர்களது வாழ்வில் தியாகம் செய்து கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை பார்க்கும் போது நமது வாழ்க்கை எவ்வளவோ மேல் என்று தோன்றும் இருந்தாலும். அந்த அளவிற்கு நமக்கு பணக்கஷ்டம் வராமல் இருந்தாலும். அது போன்ற வாழ்க்கை வாழாமல் இருப்பதற்காக ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

வறுமையில் இருந்து மீள
நாம் மிகவும் ஏழ்மையில் இருக்கிறோம் வறுமை நம்மை வாட்டி வதைக்கிறது என்று நமக்கு இருக்கும் பண கஷ்டம் என அனைத்தையும் தூக்கி விதியின் பெயரில் நம்மால் சொல்லிவிட இயலாது. அனைத்து காரியங்களில் நமக்கும் பங்கு இருக்கும் நமக்கு வரும் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வது. அப்படி செய்யும் செலவுக்கு கடன் வாங்கிக் கொள்வது எப்படி நமக்கு நாமே தான் பிரச்சனைகளை எடுத்து வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் இருந்தாலும் நமக்கு இருக்கும் பணக்கஷ்டம், கடன் பிரச்சினைகள், வீட்டில் சந்தோஷம், மகிழ்ச்சி, மன நிம்மதி என எதுவும் இல்லாமல் ஏழ்மையினால் மிகவும் கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள் படிப்படியாக உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளலாம்.
ஏலக்காய் பரிகாரம்
இப்படி ஏழ்மையில் இருக்கும் நம் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டி பரிகாரம் செய்ய நமக்கு தேவைப்படும் ஒரு பொருள் ஏலக்காய் மட்டும்தான். அதுவும் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஏலக்காய் அல்ல பெரிய ஏலக்காய் என்று கடைகளில் கேட்டால் கொடுப்பார்கள். அந்த ஏலக்காய்களில் மூன்று பெரிய ஏலக்காய்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி நாம் வாங்கி வைத்துள்ள ஏலக்காய்களை வெள்ளிக்கிழமையில் புதியதாக ஒரு பச்சை நிற காட்டன் துணி வாங்கி அதில் வைத்து முடிந்து கொள்ளுங்கள். அப்படி முடிந்து கொண்ட முடிச்சை வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தேவியார் அல்லது பெருமாள் பாதங்களில் வைத்துவிட்டு பூஜை அறையில் ஒரு விளக்கை ஏற்றி உங்களுக்கு இருக்கு பணக்கஷ்டம், ஏழ்மை கடன் பிரச்சனை எல்லாம் தீர வேண்டும் என்று மனதார மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

பணம் வைக்கும் இடம்
இப்படி பூஜை அறையில் பூஜையை முடித்தவுடன் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் நாம் வைத்திருந்த முடிச்சை எடுத்து உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அதாவது பணம் வைக்கும் பீரோ அல்லது பணம் வைப்பதுகென்று தனியாக வைத்திருக்கும் பெட்டி, நீங்கள் பணம் வைத்திருக்கிகும் எந்த இடத்திலும் இதை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி இந்த முடிச்சை பணம் வைக்கும் இடத்தில் வைக்கும் போது அங்கு நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து மகாலட்சுமி மற்றும் பெருமாளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைப்பதால் உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டம் நீங்கி ஔிமையான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கும்.
ஏலக்காய் மாற்ற
இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் நீங்கள் பணக்காரராக மாரி விட மாட்டீர்கள் என்னதான் பரிகாரம் செய்தாலும் நீங்கள் செய்யும் வீண் செலவுகளையும், தேவையில்லா செலவுகளுக்கு கடன் வாங்குவது குறைத்துக் கொள்ளுங்கள். இப்படி நாம் முடிந்து வைத்திருக்கும் முடிச்சில் இருக்கும் ஏலக்காயை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி புதிய ஏலக்காய் வைத்துக் கொள்ளலாம். அந்த பழைய ஏலக்காயை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளில் அடியில் போட்டு விடுங்கள். இதனால் உங்களுக்கு வீட்டுக்கு வரும் பணம் தடை இல்லாமல் வரும். உங்களின் வருமானத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். மேலும் உங்கள் பணப்பெட்டியில் இந்த பொருள் இருக்கும்பொழுது வீண் செலவுகளுக்கு பணம் செலவாகாது அதனால் நம்பிக்கையோடு செய்யுங்கள் நல்ல பலனை கிடைக்கும்