அவல் சுண்டலா அது என்ன என்று பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். சுண்டலையும் அவலையும் வைத்த செய்யக்கூடிய ஒரு சத்தான உணவு தான் இது. இதனை காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். சுவை என்று எடுத்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது அதிலும் இந்த சுண்டல் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடிய ஒன்று. அவலும் அப்படித்தான். மிகவும் சத்தான ஆரோக்கியமான ஒன்று. இந்த சுண்டலை தனியாக கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் எனவே இதையும் அவலையும் வைத்து ஒரு சூப்பரான உணவுதான் நாம் செய்யப் போகிறோம்.
குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக பெண்களுக்கு இதனை சாப்பிட கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த சுவையான அவல் சுண்டலை நாம் சீக்கிரத்திலேயே செய்து முடித்து விடலாம். வாங்க இந்த சுவையான அட்டகாசமான அவல் சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அவல் சுண்டல் | Poha Sundal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் அவல்
- 2 கப் சுண்டல்
- 2 வெங்காயம்
- 2 தக்காளி
- 3 பச்சைமிளகாய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கருவேப்பிலை
- 1/2 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
செய்முறை
- முதலில் சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றிய அதில் அவல் சேர்த்து நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சீரகம், கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவிற்கு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இப்பொழுது வேக வைத்துள்ள சுண்டலை அதனுடன் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான அவல் சுண்டல் ரெடி.