ஞாயிற்றுக் கிழமை வந்துவிட்டது. பலரும் என்ன சமைத்து நாவிற்கு விருந்தளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு வட இந்திய ஸ்பெஷல் ரெசிபியான செட்டிநாடு காடை கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும். செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று.
செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன. செட்டிநாடு காடை கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும்.
அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். பொதுவாக அசைவ பிரியர்களுக்கு காடை என்றால் மிகவும் பிடிக்கும். காடையில் பலவகையான ரெசிப்பீஸ் செய்யலாம். அவற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் செட்டிநாடு காடை கிரேவி. இந்த செட்டிநாடு காடை கிரேவியை மிகவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
செட்டிநாடு காடை கிரேவி | Quail Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 4 காடை
- 150 கிராம் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி
- 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
- 2 சிறிய துண்டு பட்டை
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 நச்சத்திர சோம்பு
- 1 லவங்கம்
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 4 மிளகாய்
- 6 பூண்டு
- 2 இஞ்சி
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவைக்கேற்ப
- மல்லிதழை சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் சோம்பு, மல்லி, மிளகு, நட்சத்திர சோம்பு, லவங்கம், பட்டை மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் இவை இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, பின் அரைத்த விழுதை மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பின்பு காடையை அதில் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 2-3 விசில் போடவும். கடைசியில் சிறிது மிளகு தூள், சீரகத்தூள், மல்லி தழை தூவி இறக்கவும்.
- சுவையான செட்டிநாடு காடை கிரேவி தயார்.