புட்டு வகைகளில் ரொம்பவே சத்தான புட்டு என்று இந்தப் புட்டை கூறலாம். ஜவ்வரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைவர்க்கும் அதிகம் பயன் அளிக்கக் கூடியது. சவ்வரிசி என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருள். இது சவ்வரிசி மரம் என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது… ஜவ்வரிசி இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும்.
ஆரோக்கியம் மிகுந்த ஜவ்வரிசி கொண்டும் புட்டு தயாரிக்க முடியும். பாயாசத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜவ்வரிசியை வைத்து ஏராளமான உணவுகள் தயாரிக்கலாம்! ஜவ்வரிசியில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. வயதுதானவர்களுக்கு மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் ஜவ்வரிசியை அதிகம் சேர்ப்பதால் எலும்புகள் பலப்படுகிறது. இது போல ஜவ்வரிசி புட்டு செய்து கொடுத்தால் வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இந்த ஜவ்வரிசி புட்டு எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ஜவ்வரிசி புட்டு | Sabudana Puttu Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் நைலான் ஜவ்வரிசி
- 1/2 கப் பச்சரிசி மாவு
- 1 முடி தேங்காய்
- 100 கிராம் சீனி
- 3 ஏலக்காய்
- 1/4 தேக்கரண்டி உப்பு
செய்முறை
- பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்.உடனே செய்ய வேண்டும் என்றால் தண்ணீரை 1 பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் ஜவ்வரிசியை போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து செய்யவும்.வைத்த ஜவ்வரிசியை மறுநாள் ஊற வைத்த எடுத்துதண்ணீரை வடித்து விட்டு, 1 அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு ஜவ்வரிசியுடன் உப்பு, தயாரித்து வைத்திருக்கும் அரிசி கலந்துக் கொள்ளவும். மாவு சேர்ந்துஒரே அளவிலான 5 சிறிய கிண்ணங்கள் அல்லது சிறிய டம்ளர்களை எடுத்துக் கொள்ளவும். கிண்ணத்தில் நெய் தடவி முதலில் தேங்காய் துருவலை கால் பகுதி அளவு வைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் கலந்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை முக்கால் பகுதி வைத்து அதன் மேலே மீண்டும் கால் பகுதி தேங்காய் துருவலை வைக்கவும். இதே போல 5 கிண்ணங்களிலும் ஜவ்வரிசி கலவை மற்றும் தேங்காயை வைத்துக் நிரப்பவும்.
- இட்லி பானையில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்தவும். அதில் இட்லி தட்டை வைத்து ஜவ்வரிசி, தேங்காய் கலவை நிரப்பிய கிண்ணங்களை வைக்கவும்.இட்லி பானையை மூடி வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்,
- பின்னர் வெந்த ஜவ்வரிசி புட்டை எடுத்து 1 தட்டில் கவிழ்த்து அதனுடன் மீதமுள்ள தேங்காய் துருவல், சீனி மற்றும் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காய் சேர்த்து கலந்துக் கொள்ளவும்,தேவைப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து அதனுடன் சேர்த்து பரிமாறலாம்.