இந்த ஒரு பொருளை ‌புது வருடத்தன்று பீரோவில் வைத்தால் வீட்டில் பணம் மலை போல் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பணத்தை ஈட்டுவது ஒன்றே குறியாக இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம் தான் என்பதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டியது இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் வந்து விடுகின்றன. சேமிக்க வழியே இல்லை’ என்று கவலைப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம். அபூர்வமான சில எளிய வழிபாடுகள் உண்டு. முழு நம்பிக்கையோடும் பக்தியோடும் கடைபிடித்து வந்தால் போதும் லட்சுமி கடாட்சம் பெருகும்.

-விளம்பரம்-

கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றனர். வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. 2024 ஜனவரி ஒன்றாம் தேதி மார்கழி 16ஆம் நாள் பிறக்கிறது. பொதுவாக மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யும் பிரம்ம முகூர்த்த பூஜை ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனது அன்று நாம் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக செய்ய வேண்டியவை என்ன என்பதை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம். ‌

- Advertisement -

நெய் தீபம்

ஜனவரி மாத முதல் நாளை உலக மக்கள் அனைவரும் ஆங்கில வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக இந்த புது வருடம் வரவேற்கப்படுகிறது. வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம். புத்தாண்டு அன்று இறை வழிபாடுகளில் ஈடுபடுவதும் உங்களை மென்மேலும் வளர செய்யும். அதனால் இந்த திருநாளன்று மகாலட்சுமி தாயாரையும், இந்த நாளில் பஞ்சமி திதியும் வருவதனால் வராகி அம்மனையும் நினைத்து வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த நாளில் வீட்டில் நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷமானது.

நித்திய தீபம்

தீப ஒளி என்றாலே தீமைகளை அகற்றுவது என்ற பொருள் என கூறப்படுகின்றது. அதனால் இந்த வருடம் முழுவதும் காலையும் மாலையும் வீட்டு வாசலில் நித்திய விளக்கை ஏற்ற‌ வேண்டும். தீபம் என்பது அக்னி, அக்னி தான் நமது வேண்டுதல்களையும், நாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கைகளையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றது என்பது ஐதீகம். பொதுவாக வீட்டில் ஏற்றப்படும் தீபத்திற்கு தீய சக்தியினை விரட்டி இறை சக்தியினை ஈர்க்கும் சக்தி உண்டு. அதனால் இந்த வருடம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

பணம்‌ சேர நாம் செய்ய வேண்டியவை

ஒரு பர்ஸ் வாங்க கூட கையில் காசு இல்லை என‌ கூறுபவர்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கிழிசல் இல்லாத பிரியாணி இலையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பிரியாணி இலையில் சிகப்பு அல்லது பச்சை நிற பேனாவால் ஸ்ரீம்’ என்ற எழுத்தை எழுத வேண்டும். இது மகாலட்சுமியின் பீஜ மந்திரம். இந்த வார்த்தையை எழுதிய பிரியாணி இலையை உங்களுடைய மணி பர்ஸ் அல்லது பணம்‌ வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். இந்த இலை எந்த இடத்தில் எல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமியின் அம்சம் நிறைவாக இருக்கும். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த‌ வேலையில் செய்தால் நீங்கள் வேண்டிய யாவும் கிடைக்கும். இந்த இலையை மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து வரும் பௌர்ணமி தினம் அல்லது அமாவாசை தினத்தன்று மாற்றிக் கொள்ளலாம். இந்த வழிபாட்டை நீங்கள் நம்பிக்கையுடன் செய்தால் வருடம் முழுவதும் உங்களுடைய பண வரவு அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : 2024 புத்தாண்டு அன்று வீட்டில் இதை மட்டும் செய்து விடுங்கள் போதும் வீட்டில் செல்வ வளங்கள் பெருகி கொண்டே இருக்கும்!