வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா ? சமயலறையில் இந்த 3 பொருட்களை மட்டும் வைத்து பாருங்க!

- Advertisement -

நம்முடைய வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் சமையல் அறை முக்கியமானது. அங்குதான் நம்முடைய எல்லோருடைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய சமையல் அறையை சரியாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேரும். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் இருக்கிறது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும்.

-விளம்பரம்-

சமையலறை

பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை. அதுவும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் குறைவாக புழங்க வேண்டும் அப்போதுதான் அந்த வீட்டில் சகல செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகும். பழங்கால வீடுகளில் சமையலறை பெரியதாக இருக்கும். ஒருபக்கம் அமர்ந்து காய் வெட்டுவார்கள். ஒருபக்கம் சமையல் செய்வார்கள். இப்போது சமையல் அறை சுருங்கி விட்டது.

- Advertisement -

எந்த திசையில் சமயலறையை அமைக்கலாம்?

அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக சமையல் செய்வதற்கென்று தனியாக ஒரு அறை இருக்கும் அல்லது இடம் இருக்கும் அங்கு தான் சமையல் செய்வார்கள். பொதுவாக சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைப்பதே சிறந்தது. நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும். அப்படி உங்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் சமையலறையை அமைக்க முடியாது என்றால், வடமேற்கு மூலை இரண்டாவது வாய்ப்பாக இருக்கும்.

புளி மற்றும் மிளகாய்

பொதுவாக சமையல் என்று எடுத்துக் கொண்டால் புளி, மிளகாய் மற்றும் உப்பு பெரும்பங்கு எடுத்துக் கொள்கின்றன. இந்த மூன்று பொருட்களும் மகாலட்சுமி தாயார் விரும்பி வாசம் செய்யும் பொருட்கள். இந்த மங்களகரமான பொருட்களை நாம் பீங்கான் ஜாடியில் போட்டு வைத்தால் மகாலட்சுமி தாயார் விரும்பி வாசம் செய்வார் என சொல்லப்படுகிறது. மிளகாய் வைத்து செய்யக்கூடிய ஊறுகாய் குபேரருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் ஒன்று. அதேபோல் புளியும் மகாலட்சுமி தாயார் விரும்பி வாசம் செய்யக்கூடிய பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றை நாம் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை குறையும் பொழுது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இவற்றை நாம் நிரப்ப வேண்டும்

இரவு சமயலறையில் செய்ய‌ வேண்டியவை

பெண்கள் சமைத்து முடித்தவுடன், இரவு சமையல் அறையில் பாத்திரங்களை தேய்த்து விட்டு, சிங்கை சுத்தம் செய்துவிட்டு அடுப்பை துடைத்து விட வேண்டும். ஏனென்றால் சமயலறையில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பல பொருட்கள் உள்ளன. இப்படி சமயலறை சுத்தமாக இருக்கும் போது அந்த வீட்டிற்கு பெரிய அளவில் பணகஷ்டமும் மனக்கஷ்டமும் வராது. நிச்சயமாக அந்த வீட்டில் மன நிம்மதியான வாழ்க்கை இருக்கும். அடுத்ததாக இரவு மீதம் இருக்கும் சாப்பாட்டிற்கு தண்ணீர் ஊற்றி வையுங்கள்.இது உங்களுடைய சமையல் அறையில் தானியத்திற்கு குறைவை கொடுக்காது. அதாவது சாப்பாட்டிற்கு உங்களுடைய வீட்டில் பஞ்சம் என்ற ஒரு நிலைமை வரவே வராது.

-விளம்பரம்-