By: PREM KUMAR
எந்த வீடுகளில் மரியாதையாக நடத்தபபட்டு பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு மகா லட்சுமி வாசம் செய்வாள்.
சுமங்கலி பெண்கள் வீடிற்கு வரும் பொழுது குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். மஞ்சள் கிழங்கு கொடுத்தால் பல ஜென்ம பாவம் விலகி சந்தோஷமும் பெருகும்.
காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சஹஸ்ர நாமமும் சொல்லும் வீடுகளில் செல்வச் செழிப்போடு லட்சுமி கடாட்சமாக இருக்கும்.
மாற்று திறனாளிகளுக்கு, படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உங்களாள் முடிந்த தர்மத்தை செய்து வாருங்கள் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
குபேரர் ஒரு மிகப்பெரிய ஊறுகாய பிரியர் அதனால் வீட்டில் விதவிதமான ஊறுகாய் வைத்திருந்தால் குபேரர் வீடு தேடி வருவார்.
வீட்டில் நெல்லி மரம் வளர்த்த லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சம் என்பதால் அங்கு லட்சுமி வாசம் செய்வாள்.
சண்டை, சச்சரவுள் செய்யாமல் வாழும் பெண்களின் வீட்டில் மகா லட்சுமி வாசம் செய்வாள்
இவையெல்லாம் சரியாக செய்து வந்தால் உங்கள் வீடு முழுவதும் லக்ஷ்மி கடாட்சம் நிரைந்து காணப்படும்