By: PREM KUMAR
முதலில் நாம் எடுத்துக் கொண்ட கேரட், பீட்ரூட், மாங்காய் இந்த முன்று பொருட்களையும் துருவி கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு இதனுடன் நாம் வைத்திருக்கும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதன் ஒரு தட்டையை எடுத்துக் கொண்டு அதன் மீது சிறிதளவு காரச் சட்னி தடவி நாம் தயார் செய்து வைத்த காய்கறி கலவையை இதன் மேல் சிறிது வைக்கவும்.
பின்பு அதற்கு மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது வைத்து அதன் மேல் நாம் வைத்திருக்கும் சாட் மசாலாவை மழை சாரல் போல் தூவி விடவும்.
பின் நறுக்கிய கொத்தமல்லி இலையை சிறிது மேல் வைக்கவும். அதன் பின்பு கையில் இன்னொரு தட்டையை எடுத்து கொண்டு.
அதன் மேல் நாம் வைத்திருக்கும் புதினா சட்னியை தடவ காய்கறியின் மேல் வைத்து மூடி விடவும்.
அவ்வளவுதான் காரசாரமான சுவையில் சேலம் தட்டுவடை இனிதே தயாராகிவிட்டது குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுங்கள்