நாட்டுக்கோழி என்றாலே, குழம்பு வறுவல் தான் செய்து சுவைத்திருப்போம்.. நாட்டுக்கோழி சதை பகுதி மிக சிறிதளவே கிடைக்கும்.. மீதி எலும்பு பகுதியாக இருக்கு. சிறிதளவில் இருக்கும் நாட்டுக்கோழி சதை பகுதியை வறுத்தால் ஒருவருக்கே கிடைக்கும். நாட்டுக்கோழி எலும்பு குழம்பு வைத்து விட்டு. சதை பகுதியை இந்த மசாலா வகையை சேர்த்து அரைத்து நாட்டு கோழி கோலா உருண்டை செய்தால் அனைவருக்கும் பரிமாறலாம் ,சுவையோ அலாதியாக இருக்கும்.
இந்த நாட்டுக்கோழி கோலா உருண்டை கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த நாட்டுக்கோழி கோலா உருண்டை. இந்த கோலா உருண்டையை சுவையாகவும், சுலபமாகவும் நம் வீட்டிலேயே செய்யலாம்.
கறி எடுத்து கோலா உருண்டை செய்யவில்லை என்றாலும், சட்டுனு ஈசியா செய்யக்கூடிய இந்த நாட்டு கோழி கோலா உருண்டை செஞ்சு பார்க்கலாமே! நாட்டு கோழி உருண்டை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்!
மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டவர்கள் இந்த வகையில் நாட்டுக்கோழி கோலா உருண்டை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். இது நீங்கள் சாப்பிட்ட அதே கறியின் சுவையில், இன்னும் சொல்லப் போனால் அதைவிட அலாதியான சுவையில் இருக்கக்கூடிய இந்த கோலா உருண்டை ரொம்பவும் ஆரோக்கியமானது.நாட்டுக்கோழி கோலா உருண்டைகளை ரொம்ப சுலபமாக எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
நாட்டுக்கோழி கோலா உருண்டை | Country Chicken Kola
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ எலும்பில்லா நாட்டு கோழி
- 40 கிராம் வெண்ணெய்
- மிளகுத் தூள் சிறிதளவு
- 3 டீஸ்பூன் மக்காச் சோளம் மாவு
- உப்பு தேவையானஅளவு
- பாலாடை சிறிதளவு
செய்முறை
- மிக்ஸியில் முட்டைகளின் மஞ்சள் கரு மற்றும் சுத்தம் செய்து சதைப் பகுதியை மட்டும் எடுத்த சிக்கனை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த கலவையுடன், வெண்ணெய், மிளகு தூள், மக்காச்சோளம், உப்பு, பாலாடை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- இந்தக் கலவையை எடுத்து கோலி குண்டுகள் அளவுக்கு உருட்டிக் கொள்ளவும். கால் கிலோ சிக்கனுக்கு 20 உருண்டை வரும்.
- இதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். கோலா பொன்னிறமாக இருக்கும் படி பார்த்து எடுக்க வேண்டும்.
- சூடான நாட்டு கோழி கோலா ரெடி!