ஹோட்டல் சுவையில் முந்திரி மசால் தோசை யாருக்குத்தான் பிடிக்காது. மேலே தக தகவென பொன்னிறத்தில் ஜொலிக்க கூடிய அப்படி ஒரு தோசையை வீட்டிலேயே சுவையாக செல்லைய்யமுடியும். தோசை அரைப்பது போலவே மாவு அரைத்து. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி தோசை சுட்டுப் பாருங்கள். ஹோட்டல் முந்திரி மசால் தோசை உங்களுடைய வீட்டிலும் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்கள் மசால் தோசைசாப்பிட ஹோட்டலுக்கு போக மாட்டாங்க. உங்க கிட்ட தான் வருவாங்க. மசாலா தோசை என்பது மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும். இது கர்நாடகத்தின் மங்களூரில் தோன்றி பரவியதாக கருதப்படுகிறது. இது இந்தியா முழுவதும் உடுப்பி உணவகங்களின் வழியாக பிரபலமைடைந்தது. இது தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்த்தாக உள்ளது. என்றாலும் இந்தியா மிழுவதிலும் கிடைக்கக்கூடியது.
சுட சுட எத்தனை முந்திரி மசால் தோசை சுட்டாலும் தட்டில் நிற்காது. உடனடியாக காலியாகிவிடும். அவ்வளவு ருசியான ஒரு மசாலா வாசம் நிரம்பிய தோசையை எப்படி செய்வது. முந்திரி மசால் தோசை வீட்டில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் இந்த தோசையை தான் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.
ஒரே மாதிரி இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்கும்.முந்திரி மசால் தோசை நெஜமாவே இருபது நிமிஷத்தில் செய்வீங்க. இதே செய்முறையில் முந்திரி மசால் தோசை உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்
முந்திரி மசால் தோசை | Cashew Masala Dosai Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தோசைக்கு
- 2 கப் தோசை மாவு
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
மசாலாவுக்கு
- 1/4 கிலோ உருளைக்கிழங்கு
- 1 கேரட்
- 1/4 கப் பட்டாணி
- 2 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 2 தக்காளி
- 10 முந்திரி
- 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 டீ ஸ்பூன் கடுகு
- 1 டீ ஸ்பூன் உளுந்து
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசியுங்கள். கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.
- பின்னர் கேரட், பட்டாணி சேர்த்து நன்கு. வதக்குங்கள். அத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்குங்கள்.
- கடைசியில் கடலை மாவை, சிறிது தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து, மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். தோசைக்கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள்.
- எண்ணெய்,நெய்யைக் கலந்துகொண்டு, தோசையைச் சுற்றிலும் சிறிது ஊற்றுங்கள்.. நடுவில் சிறிது மசாலாவை. பரவினாற்போல வைத்து, தோசையை மடித்து வெந்ததும் எடுங்கள்.
- ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும். சிறிது தண்ர் தெளித்து, கல்லைத் துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை பொன்னிறமாக வரும்.