குடைமிளகாய் அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த மாதிரி உணவுகள் தான். ஆனால் குடைமிளகாய்ல சாம்பார் , கூட்டு எப்படி நிறைய வெரைட்டிஸ் உணவு பண்ணுவாங்க. ஏன் குடைமிளகாயில் வறுவல் கூட பண்றாங்க. புலாவ் பிரியாணி எப்படி நிறைய இடத்துல நம்ம குடைமிளகாய சேர்த்து சாப்பிட்டு இருக்கோம். இப்ப நம்ம பண்ண போற சட்னி கூட வைக்கலாம்.
இந்த சட்னி ரொம்பவே டேஸ்டா இருக்கிறது மட்டுமல்லாமல் இந்த குடைமிளகாய் சட்னியை சப்பாத்தி சாதத்துக்கு கூட சேர்த்து வச்சு சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த குடமிளகாய் சட்னி. ரொம்ப டேஸ்டா இருக்கு இந்த குடைமிளகாய் சட்னியை ரொம்பவே ஈசியா பண்ணிடலாம். இன்றைக்கு என்ன சமையல் செய்றது அப்படின்னு குழப்பமா? அப்போ இன்னைக்கு காலைல குடைமிளகாய் சட்னி வச்சீங்கன்னா போதும் காலையில் இருந்து இரவு முழுவதும் வரைக்கும் சாப்பிடறதுக்கு இந்த உணவு ரொம்பவே நல்லா இருக்கும்.
காலையில் டிபனுக்கும் சரி மத்தியானம் சாதத்துக்கும் சரி நைட் டிபனுக்கும் இந்த குடைமிளகாய் சட்னியை சேர்த்து சாப்பிடலாம். இந்த அளவுக்கு ருசியான குடைமிளகாய் சட்னி வாயில வச்ச உடனே அப்படி ஒரு சுவையை நாக்கு கொடுக்கும். அந்த அளவுக்கு ரொம்பவே நல்லா இருக்கும் இந்த குடமிளகாய் சட்னி. நீங்க என்ன் சட்னினு சாப்பிடு வைக்கும்போது சொல்லாமல் வச்சிட்டீங்கன்னா மட்டும் பாருங்களேன் உங்க வீட்ல இருக்குறவங்க எல்லாருமே சாப்பிட்டு இது என்ன சட்னி இது என்ன சட்னி அப்படின்னு உன்கிட்ட கேட்டுகிட்டே இருப்பாங்க. நல்லா இருக்கு திரும்பி திரும்பி இந்த சட்னி தான் வைக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு இந்த சட்னி ரொம்பவே சுவையா இருக்கும். வாங்க இந்த குடைமிளகாய் சட்னி எப்படி வைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
குடைமிளகாய் சட்னி | Capsicum Chutney in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கப் குடைமிளகாய்
- 2 தக்காளி
- 1 வெங்காயம்
- 5 பச்சைமிளகாய்
- நெல்லிக்காய் அளவு புளி
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் தனியா விதைகள்
- 7 பல் பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, மிளகு, தனியா விதைகள், பூண்டு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய்களை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு, புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்க வேண்டும்.
- பிறகு மிக்ஸி ஜாரில் வறுத்து எடுத்து வைத்துள்ள வெந்தயம், கடுகு மிளகு, தனியா விதைகள், பூண்டு இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து விட வேண்டும்.
- இப்பொழுது வதக்கி வைத்துள்ள குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள குடைமிளகாய் சட்னியை சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் சூடாக இட்லி தோசை உடன் பரிமாறினால் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.