- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது.
இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃப்ளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.
காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம். நமது வீட்டில் காலிஃப்ளவரை வறுவல், 65 போன்று செய்து குடுத்திருப்பார்கள். ஆனால் அதையே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போகிவிடும்.
தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். அந்த வகையில் இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து மட்டன் கிரேவிக்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பச்சை பட்டாணியில் ருசியான கோப்தா இப்படி செய்து பாருங்க! மாலை நேரம் சாப்பிட ஸ்நாக்ஸ் ரெடி!
Ingredients
Method
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் முந்திரி சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், பிரியாணி இலை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் மல்லி தூள், மிளகு தூள், சீரகம் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இது ஒரு கொதி வந்ததும் பச்சை பட்டாணி மற்றும் காலிஃப்ளவர் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா தயார். இதை சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.






