வெறும் கீரையை வைத்து மட்டும் இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு, வெங்காயம் எதுவுமே சேர்க்க போவது கிடையாது. கீரை வேக வைத்து விட்டு மைய கடைந்து விட்டால் போதும். சுவையான சத்து நிறைந்த பச்சை கீரை மசியல் தயார். ஆரம்பத்தில் சமைக்க பழகுபவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ரெசிபியை நிச்சயம் எல்லோரையும் ஒரு முறை செய்து பார்க்கவேண்டும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அத்தகைய கீரையை பலவாறு செய்து சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு கீரையைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் மசியல் செய்யத் தெரியுமா? இல்லையெனில் இதே முறையில் ஒரு முறை இப்படி செய்தல் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும்,எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உதவுகிறது. கீரையில் குறைந்த கிளை செமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) இருப்பதால், இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்
இங்கு அந்திரா ஸ்டைலில் எப்படி கீரை மசியல் செய கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருநதது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆந்திரா கீரை மசியல் | Andhra Keerai Masiyal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 கப் பசலைக்கீரை/அரைக்கீரை
- 1 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- உப்பு தேவையானஅளவு
வறுப்பதற்கு
- டீஸ்பூன் எண்ணெய்
- 2 வரமிளகாய்
- டீஸ்பூன் சீரகம்
- 6 பற்கள் பூண்டு
தாளிப்பதற்கு
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- கீரை நன்கு சுத்தம் செய்யவும். மற்ற தக்காளி பச்சைமிளகாய்யை தயாராக எடுத்து வைக்கவும்.
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கீரை, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
- பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கீரையில் சேர்த்து, சிறிது உப்பையும் சேர்க்க வேண்டும்.
- பின்பு கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளலாம்.
- சுவையான ஆந்திரா கீரை மசியல் தயார்.