Home சைவம் மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா...

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கில் சாதம் செய்வது எப்படி என்று காண உள்ளோம். வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த சுவையான சாதத்தை செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Print
No ratings yet

சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் | Sweet Potato Sadam Recipe In Tamil

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கில் சாதம் செய்வது எப்படி என்று காண உள்ளோம். வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Sweet Potato Sadam
Yield: 3 People
Calories: 162kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் வேகவைத்த சாதம்
  • 2 சர்க்கரை வள்ளி கிழங்கு
  • 1 கேரட்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 சிறிய குடைமிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கேரட், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தேங்காய் துருவல், சர்க்கரை வள்ளி கிழங்கு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • இவை நன்கு வதங்கியதும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 162kcal | Carbohydrates: 3.6g | Protein: 7.3g | Fat: 5.1g | Sodium: 33mg | Potassium: 157mg | Fiber: 5.6g | Vitamin A: 33IU | Vitamin C: 40mg | Calcium: 10mg | Iron: 6.1mg

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு சுட சுட அப்பள சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!