உங்கள் வீட்டில் அரிசியை சேமித்து வைக்கும் போது, அரிசியைக் கெட்டுபோக வைக்கும் மாவுப்பூச்சியுடன் சில பூச்சிகளும் இருக்கும். இந்த அரிசியை சமைத்து சாப்பிட கூடாது. அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க இந்த டிப்ஸ்களை செய்து பாருங்கள் பலர் நான்கைந்து மாதங்களுக்கு தேவையான அரிசியை வாங்கி வீட்டில் வைத்திருப்பார்கள். அப்போது அரிசி பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படும். பூச்சிகளை அகற்றுவது எளிதானது அல்ல. அரிசிக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க முடியாது. ஆனால் சில பொருட்களை வைத்து பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
பிரியாணி இலை :
அரிசியில் உள்ள புழுக்களை போக்க பிரியாணி இலை சிறந்தது. அரிசியை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து, அதில் சில பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் புழுக்கள் வராது.
வேப்பிலை :
அரிசி பைகளில் இருந்து பூச்சிகளை விலக்கி வைக்க வேப்ப இலைகள் சரியானவை. அரிசியுடன் சிறிது வேப்ப இலைகளைச் சேர்த்து, அரிசிப் பைகளைச் சுற்றிலும் வைக்கவும். புழுக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.
பூண்டு :
பூண்டால் அரிசியில் உள்ள குடற்புழுவை நீக்க முடியும். உரிக்கப்படாத பூண்டை அரிசி கொள்கலனில் வைக்கவும், அவை உலர்ந்தவுடன் அவ்வப்போது அதை நீக்கி விட்டு புதிய பூண்டுகளை பயன்படுத்தவும்.
வர மிளகாய் :
அரிசியுடன் சிறிது காய்ந்த மிளகாயைச் சேர்த்துக் கொள்ளுங்கள், மிளகாயின் சூடு அரிசியில் உள்ள கிருமிகளை வராமல் தடுக்கும்.
கிராம்பு :
சில கிராம்புகளையும் அரிசியில் சேர்க்கலாம். கிராம்பு விஷம் அல்ல. கூடுதலாக, கிராம்பு எண்ணெயை சமையலறையில் தெளித்தால் அது சமையலறை கிருமிகளை அழிக்கும்.
உங்கள் வீட்டில் பூச்சி தொல்லை இருப்பின் இந்த பயனுள்ள தகவல்களை பின்பற்றி உங்கள் வீட்டில் உள்ள பூச்சிகளை ஓட செய்யுங்கள்.