ஒரு மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுவது வாழை மரத்தில் மட்டுமே.இந்த வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் நமக்கு உணவாகவோ உணவு உண்பதற்காகவும் ஏதோ ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த வாழை மரங்கள் தார் விடுவிட்டால் அதன் அடியிலிருந்து இரண்டு மூன்று வாழை கன்றுகள் முளைத்து வரும் அப்படிப்பட்ட வாழைமரம் இன்றியமையாத பல நன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாழை இலையில் உணவு உண்ணலாம் .
வாழைமரத்தின் பட்டையில் நார் எடுத்து பூ கட்டுவது. வாழைத்தண்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வாழைப்பூ உணவாக எடுத்து கொள்கிறோம். வாழைக்காய் வாழைப்பழம் உணவாக சேர்த்துக் கொள்கிறோம். வாழைக்கிழங்கு கூட உணவாக சாப்பிடுகிறோம். வாழைக்கிழங்கில் வரக்கூடிய தண்ணீர் சிறுநீரக கல்லையுப் உடல் சூட்டையும் தணிப்பதற்கு மிகவும் இன்றி அமையாத ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை வைத்து சுவையான பொரியல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்க இருக்கிறோம். இந்த வாழைத்தண்டு பொரியல் உடலுக்கு நம்மை கொடுக்கின்றது..
இந்த வாழைத்தண்டு சிறுநீர் பெருக்கை அதிகப்படுத்துகிறது. வாழைதண்டில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நமக்கு செரிமான பிரச்சனையை தீர்த்து மலச்சிக்கலை குறைக்கின்றது. இந்த வாழைத்தண்டை சூப், பொரியல், கூட்டு போன்றவை வைத்து சாப்பிடும் போது சத்துக்கள் கிடைக்கிறது. இந்த வாழைத்தண்டு பொரியலை மிக எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
வாழைத்தண்டு பொரியல் | Banana stem Stir Fry In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் வாழைத்தண்டு
- 1 வெங்காயம்
- 2 காய்ந்த மிளகாய்
- 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையானஅளவு
தாளிக்க
- எண்ணெய் தேவையான அளவு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து அதில் உள்ள நாரை பிரித்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரிசி கழுவிய தண்ணீர் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
- காரணம் வாழைத்தண்டில் இருக்கின்ற இரும்பு சத்து சீக்கிரமாக வாழைத்தண்டை கருத்து போக செய்து விடும் ஆகையால் அதை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். சிலர் மோரில் போட்டு வைப்பார்கள்.
- பிறகு அடுப்பில் ஒரு வானொலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் போட்டு பொறிந்ததும் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஊறவைத்த கடலை பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
- பின் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு பொடியாக அறிந்து வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும். கலந்து விட்ட வாழைத்தண்டில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- வாழைத்தண்டு நன்றாக வெந்த பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் ருசியான சத்தான வாழைத்தண்டு பொரியல் தயார்.