எவ்வளவுதான் தலைகீழாக நின்று யோசித்தாலும் கசப்பே தெரியாமல் பாகற்காய் சமைக்க முடியாது. ஆனால் இந்த பாவற்காய் சிப்ஸ் கசப்பே தெரியாமல் செய்து விடலாம் .அனைத்து சாத வகைகளுக்கும் இப்படி ஒரு சிப்ஸ் செய்தால் பக்கா வான பக்க உணவு . அனைவர்க்கும் உபயோகமான ரெசிபியை தான் என்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பாகற்காய் வைத்து இப்படி சிப்ஸ் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் கூட அது கெட்டுப் போகாமல் இருக்கும்.
சிப்ஸ் வகைகள் என்றாலே எல்லோரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தான் வழக்கமாக வைத்திருப்போம். அது எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. நம்முடைய குழந்தைகளுக்கு, நான்கு நாட்களுக்கு தேவையான பாகற்காய் சிப்ஸ் , நம் வீட்டிலேயே தயாரித்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். வாரம் ஒருமுறை இந்த பாகற்காய் சிப்ஸை செய்து, அனைத்து விதமான சாதத்திற்கு, அல்லது ஸ்னாக்ஸ் ஆகவோ சாப்பிடலாம் , உறவினர்களுக்கும் கொடுக்கலாம். சுவையான, சுலபமான, காரசாரமான பாகற்காய் சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா?
பாகற்காய் சிப்ஸ் | Bitter guard Chips In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 பெரிய பாகற்காய்
- 1 மே.கரண்டி. மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள்
- உப்பு தேவைக்கு
- 1 மே.கரண்டி. அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளார்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
- எண்ணெய் பொரிக்க தேவையானது.
செய்முறை
- பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சேர்த்து விரவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு இதில் அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளார் சேர்த்து சிறுது தண்ணீர் தெளித்து கைகளை வைத்து பிரட்டி மீண்டும் ஒரு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பிரட்டி வைத்த பாகற்காயினை பொறித்து எடுக்கவும்.
- சுவையான கசப்பில்லாத பாகற்காய் சிப்ஸ் ரெடி.