அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் உருளையம் தான். ஏனென்றால் உருளை, கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கத்திரிக்காய் உருளை சேர்த்து ஒவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். அதாவது சில பேர் மசாலா பொருட்களை சேர்த்து இந்த கத்தரி உருளை மசாலா செய்வாங்க. சில பேர் அதிக மசாலா பொருட்களும் சேர்க்காமல், இந்த ரெசிபியை செய்வார்கள்.
இன்று சுலபமான முறையில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி களைந்த நீர் சேர்த்து கத்தரி உருளை மண்டி செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெசிபிக்கு மசாலா பொடி தேவை இல்லை. அப்படி இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும்.
தினம் தினம் மூன்று வேளை உணவு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். அவ்வாறு மூன்று வேளைக்கும் மூன்று விதமான உணவுகளை சமைத்துக் கொடுப்பதேன்பது மிகவும் கடினமான செயல் தான். அதிலும் மதிய வேலை என்றாலே சாதம், குழம்பு, பொரியல் என்று பலதரப்பட்ட உணவுகளை சமைக்க வேண்டியிருக்கும்.
இந்த கத்தரி உருளை மண்டி நீங்களும் செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுபவர்களை இன்னும் ஒரு பிடி சாதத்தை சேர்த்து சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு நாவில் எச்சில் ஊறும் சுவையில் மணமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கத்தரி உருளை மண்டி | Brinjal Potato Mandi Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 6 கத்தரிக்காய்
- 1 உருளைக்கிழங்கு
- 15 சின்ன வெங்காயம்
- 4 பச்சை மிளகாய்
- 1 தக்காளி
- புளி நெல்லிக்காய்அளவு
- 1 கப் அரிசி களைந்த நீர்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி
- உப்பு தேவையானஅளவு
- 3 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி வெந்தயம்
செய்முறை
- கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்துஎடுத்துக் கொள்ளவும்.
- குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு. வெந்தயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, மிளகாய் பொடி சேர்க்கவும். பிறகு நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
- அத்துடன் புளி தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் வரவிடவும்.. ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சற்று கெட்டியாகும் வரை 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- மதுரை ஸ்பெஷல் கத்தரி உருளை மண்டி தயார். இது எலுமிச்சை சாதம், புளியோதரை என அனைத்துடனும் சாப்பிடப்பொருத்தமாக இருக்கும். பயணத்திற்கு ஏற்ற பக்க உணவு இது.